தாஜ்
தாலி
அவளைப் பார்த்ததாகச் சொல்லி
அடையாளங்களும் சொன்னான்
ஏழ்மை கோலமெல்லாம்….
சொன்னவரை சரி
கழுத்தில் தாலியாம்!
நடப்பின் யுகப் பெருமை
புரியவில்லை அவனுக்கு
அது அவளாக இருக்காது.
பின்னே விழும் பிம்பங்கள்
உயரே தூக்கி
மாட்டப்பட்டிருக்கிறது
முறுக்கேறிய
ஆணின் பிம்பம்
இன்னும் மேலே
ஏற்றி வைத்துப் பார்க்க
நவீன கலவைகளோடு
பெண்ணை தீட்டுகிறேன்
புத்துயிர்ப்புடன் அவள் எழ!
எத்தனை அற்புதங்களைக்
கூட்டினாலும் அவளின்
மரபார்ந்த மார்பைப்
புடைக்க வைக்கத்தான் வேண்டியிருக்கிறது.
கார்க் கூந்தலைத் தவிர்த்தாலும்
கொஞ்சமேனும் நீள முடி காட்டி
புருவத்தை சிரைத்து நீட்டி
கண்களுக்குள் காந்தத்தை ஏற்றனும்!
ஆணின் மீசைப் பிரதேசம்
இங்கே பொட்டலாக
கொவ்வை உதடுகளுக்கு
வண்ணப் பூச்சைக் கூட்டனும்!
இன்னும் கூடுதலாய் அவள்
பற்களையும் பளிச்சிட வைத்தால்
மாசுப்படுமென விட்டு
குடத்தைத் தட்டி ஒடுக்கி அவள்
இடுப்பின் வடிவில் கூடுதல்
யோசனை கொள்ளும் நேரம்
புருஷர்களால் ஸ்தலம் ஸ்தம்பிக்க
உயிர் கொண்டது சித்திரம்
முறுக்கு மீசையோடு
பளீச்சென தெரிந்தனப் பற்கள்
ஆதி சிரிப்பின்
ஆயுதச் சுழிப்போடு.
satajdeen@gmail.com
- மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்
- பெயரின் முக்கியத்துவம் பற்றி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? (கட்டுரை: 29)
- பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)
- அமெரிக்கத் தேர்தல் களம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5
- தெய்வ மரணம்
- சேவல் திருத்துவசம்
- எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11
- தொ(ல்)லைக்காட்சியின் கதை!
- காலம் மாறிப்போச்சு:
- தமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்
- தமிழும், திராவிடமும்!
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்
- பார்வை
- வேரை மறந்த விழுதுகள்
- தாஜ் கவிதைகள்
- பட்ட கடன்
- தேடல்
- நினைவுகளின் தடத்தில் (9)
- ஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு
- வார்த்தை மே-2008 இதழில்
- வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?
- ஒரு ரொட்டித்துண்டு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !
- தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !
- கருணாகரன் கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!
- ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?
- இல்லத்தின் அமைப்பியல் விதி !