தீபச்செல்வன்
பறவை மிருகமாகியது
எனது தனிமையில்
துயருமும் இருந்தது
நிம்மதியும் இருந்தது
நான் எப்படி
சொல்லிவிட
கூட்டத்திற்கும்
தனிமைக்கும்
உங்களுக்கும்
எனக்கும் இடையில்
உறவு தேவையென்பதை
எனது நண்பனும்
நானும்
மிருகமாகி
தனித்திருக்கிறோம்
நகங்களை
கூர்மையாக்கியபபடி
பறவையின் கனவிலிருக்க
மிருகங்களாகியதை
நானும் அவனும்
யாருக்கும் சொல்லவில்லை
செட்டையை கழற்றி விட்டு
நழுவி நகர்கிற
மிருகமாகி
நானும் அவனும்
பிரிந்து போகிறோம்
நானும் அவனும்
ஒரு கூட்டமாகியிருந்ததை
யார் கவனித்தார்கள்
இந்த மிருகமுகங்களை
அணிந்ததையும் கூட
யார் கவனித்தார்கள்…..
பாம்பு நெளியும் அறை
சைக்கிளில் பாம்புகள்
நெளிந்து வழிகிறது
இன்னும் கயிறு
பாம்பாகவே தெரிகிறது
இருட்டை நிறைத்திருந்த
பாம்புகள்
பகலிலும் நெளிகிறது
சொற்களிலும்
புன்னகையிளலும்
நீ பாம்பை நெளிய விடுகிறாய்
பாம்புகளாய் காண்கிறாய்
கழுத்தில் பாம்பு
அசைய
கயிற்றில் விஷம் வடிகிறது
மரங்களையும்
வீதிகளையும்
நீ பாம்புகள் என்கிறாய்
புல்வெளிகளை
பாம்புமேடு என்கிறாய்
மேசையில் வந்துகிடந்த
பாம்பு மெல்ல
அசைந்து அசைந்து
அறையை விட்டு
வெளியேறுவதுபோல
நீ அறையை விட்டுபோகிறாய்
குட்டிப்பாம்புகளைப்போல
உனது சொற்களும்
உனது கோபங்களும்
கொட்டிக்கொண்டிருக்கிறது
பாம்புக்கயிற்றால்
நீ கட்டி வைத்திருந்த
பிடியும் முடிச்சும்
அறுந்துவிட
நான் வெளியில் விழுகிறேன்
மேசைக்கு கீழே புகைந்த சிகரட்
மின்சாரம் நிரபப்பட்ட
மீன் தொட்டியில்
துடிக்கிற
மீன்களைப்போல
உனக்கும் எனக்கும் இடையில்
மேசைவிளக்கு துடிக்கிறது
உடைந்த கதிரையை
கோதுமை மாப்பசையினால்
ஒட்டிவிட்டு
என்னை இருக்கவைத்து
பேசிக்கொண்டிருக்க
உனது குரூர வார்தைகளுடன்
கதிரையும் நானும்
உடைந்து விழுகிறோம்
கடல் கரையில்
நீயும் நானும்
குடித்தவிட்டுப் போட்ட
பியர் போத்தல்கள்
பிசுங்கானாகி
காலை கிழித்து விட்டிருக்கிறது
நீயும் நானுமிருந்து
பேசியகடல் மணல் கரையில்
குருதி கொட்டியிருக்கிறது
உனது சொற்களும்
பிசுங்கானைப்போல
என்னை
கிழித்தப் போட்டிருக்கிறது
முகம் பார்த்த கண்ணாடி
கைதவறி விழுந்து
உடைவதைப்போல
உனது சைக்கிளில் இருந்து
நான் விலகி விழுகிறேன்
நீ ஒளித்து வைத்து
புகைத்த
சிகரட்டின்
சாம்பல் தணலாகி காலை
சுடுகிறது
மேசைக்கு கீழிருந்து
சிகரட்டை
புகைக்கிறாய்
இனி
உனக்கும் எனக்கும்
இடையில்
கயிறுகளும் இல்லை
பாலமும் இல்லை
படிகளும் இல்லை
துரோகம் மட்டும்
சுற்றி வளைத்திருக்கிறது.
deebachelvan@gmail.com
- மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்
- பெயரின் முக்கியத்துவம் பற்றி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? (கட்டுரை: 29)
- பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)
- அமெரிக்கத் தேர்தல் களம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5
- தெய்வ மரணம்
- சேவல் திருத்துவசம்
- எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11
- தொ(ல்)லைக்காட்சியின் கதை!
- காலம் மாறிப்போச்சு:
- தமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்
- தமிழும், திராவிடமும்!
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்
- பார்வை
- வேரை மறந்த விழுதுகள்
- தாஜ் கவிதைகள்
- பட்ட கடன்
- தேடல்
- நினைவுகளின் தடத்தில் (9)
- ஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு
- வார்த்தை மே-2008 இதழில்
- வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?
- ஒரு ரொட்டித்துண்டு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !
- தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !
- கருணாகரன் கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!
- ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?
- இல்லத்தின் அமைப்பியல் விதி !