தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான் !
ஆண்டாள் (திருப்பாவை)
காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !
எளியவர் பேணிடும் கோமகன்
என் கனவிலே வந்து
எனை மணந்தார் சகோதரி !
முப்பத்து முக்கோடித் தேவரும் ஆடிப்
பாராட்டுவார்
வருகை தந்து விழாவுக்கு !
கருமேனியான்
கனவிலே வந்தான்
எனது மணமக னாக !
தோரணப் பந்தல்
தோன்றிய தென் கனவிலே !
கைத்தலம் பற்றினோம் சகோதரி !
கனவில் மணந்து
பிரபு, எளியவர் தோழன்,
மீராவைச் சயன அறைக்கு
அணைத்துச் செல்வான் !
முற்பிறப்பின் புனிதச் செயல்
நற்பலன் அளிக்கிறது
பிற்பொழுதில் !
ஆயிரம் நன்றி ஜோதிடரே !
கருநிறத் தான் வருகை தனை
அறிவித் தமைக்கு !
மோகத்தில் கண் மூடும்
ஆத்மா சயன அறை
நோக்கி ஏகும் !
ஐம்புலன்கள் தோழிகளாய்
ஒன்று கூடி
ஒப்பிலா இன்பம் அளிக்க
ஓடிச் செல்லும் !
ஒயில் தோற்றம் கண்டதும்
வேதனை தீரும் !
காதல் மோகம் கனிந்து
தாகம் எழும் !
இன்பக் கடலில் மூழ்கும்
என்னுடல் !
(திருத்தம் செய்யப்பட்டது)
காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !
யோகியே ! உன் அந்தரங்க
இரகசியத்தை
அறிய முடியாதவள் நான் !
அங்கங்களில் திருநீறு பூசி,
உத்திராட்ச மாலை கழுத்தில் சூடி,
புனித வேடத்தில்
குகையில் அமர்ந்து தவம் செய்தேன் !
கருமேனியான் மீது
காதல் மோகம் ! அந்தோ இல்லை !
மடியாத அவன்
மன அந்தரங் கத்தைத் தொட
முடியாதவள் நான் !
மீராவுக்கு
எதிர்ப்படுவ தெல்லாம்
விதியின் கை
எழுதி வைத்தவை !
*********
(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)
(தொடரும்)
************
Holy Fire
(A Collection of English Poems)
(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994
Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers
1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 12, 2008)]
- மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்
- பெயரின் முக்கியத்துவம் பற்றி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? (கட்டுரை: 29)
- பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)
- அமெரிக்கத் தேர்தல் களம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5
- தெய்வ மரணம்
- சேவல் திருத்துவசம்
- எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11
- தொ(ல்)லைக்காட்சியின் கதை!
- காலம் மாறிப்போச்சு:
- தமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்
- தமிழும், திராவிடமும்!
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்
- பார்வை
- வேரை மறந்த விழுதுகள்
- தாஜ் கவிதைகள்
- பட்ட கடன்
- தேடல்
- நினைவுகளின் தடத்தில் (9)
- ஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு
- வார்த்தை மே-2008 இதழில்
- வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?
- ஒரு ரொட்டித்துண்டு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !
- தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !
- கருணாகரன் கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!
- ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?
- இல்லத்தின் அமைப்பியல் விதி !