பார்வை

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

இராம வயிரவன்



மெல்ல
இமை திறந்து
உருள்கின்றன கருமுத்துக்கள்

குறுக்கே
முளைத்த
கண்ணாடிச் சுவர்கள்
நிறங்களைக்
கூட்டி வந்தன

பாய்ச்சப்படும் கதிர்களின்
நிரம்பி வழியும்
நம்பிக்கைகளின் பிடியில்
நீண்டு விரிகிறது
எனக்கான பார்வை

காணப்படு பொருள்
கண்வீச்சில்
எறிந்து சாம்பலாகிறது

பிசுபிசுத்த
மூளை மடிப்புக்கள்
சாம்பலை ஊள்வாங்கி
நோபல் விஞ்ஞானியாய்
ஊடுறுவி
பகுத்துச் சிதைத்து
பெரிதாய்ச் சாதித்த களைப்பில். .
தலை வலிக்கிறது

‘எப்படி பார்க்க வேண்டும்?’

விலகிப் பார்த்த போது
சூரியன் விண்மீனாகி
பதில் சொன்னது

‘மூளையால் பார்க்காமல்
இதயத்தால் பார்’


rvairamr@gmail.com

Series Navigation

author

இராம. வயிரவன்

இராம. வயிரவன்

Similar Posts