காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் !

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல்
வைர மணிகள் உண்டோ ?
சீர்பெற்று வாழ்வற்கே – உன்னைப்போல்
செல்வம் பிரிது முண்டோ ?

பாரதியார் (கண்ணம்மா என் குழந்தை)
++++++++++++++++++++++++

காற்றினிலே வரும் கீதங்கள் – 17
ஆத்ம தாகம் தீர்ப்பவன் !

கருமேனி யான் மேலிடும்
காதல் முத்திரை இது !
கண்கள் புல்லரிக்க வேண்டும்
ஞான ஒளியுடன்
என் நேசனே !
மணமகள் போல் நகையணிந்தேன்
எனது காதலனை விரைவில்
வரவழைக்க !
சாவதற்கு மட்டும் பிறக்கும்
சாதா மனிதனைத்
தேர்ந் தெடுக்க வில்லை நான் !
உடைக்க முடியாத
வைரக்கல் அவன் !
கருமேனியான்
அருகில் படுக்க விருப்பம் !
பிறவிக்குப் பின்வரும் பிறவியில்
மீராவின்
ஆத்ம தாகம் தீர்ப்பான் !
காத்திருக்கிறாள்
கண்ணன் வருகைக்கு !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 22, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts