தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உலகத்தின் கொடூர எடைக்கோல்
கணிப்பிலும் கிடைக்கும்
உதைக்கு மத்தியிலும் தவிக்கிறேன்
இப்போது !
என் தோற்றத்தை எழிலாக
ஒப்பனை செய்யும்
கழுத்தணி, காதணி, வளையல்,
பொன்னா பரணம்
அனைத்தும் அகற்றினேன் !
உன்னாசைக் கரத்தில் உள்ள
வீரக்குறி அம்புகள்
தீரா என் நடுக்கத்தை
வேரறுக்க நெருங்கட்டும்.
யுத்தத் தளபதியே !
போரா யுதங்களைக் கையாளத்
தாராய் எனக்குப் பயிற்சி !
கடும்பணி புரியத் தந்தை போல்
கட்டளையிடு
கருணை என்மேல் பூண்டு.
கோர வலிக்கு அனுதாப மின்றி
பளுவான பொறுப் பளித்து
பாராட்டு என்னை புதிய
போருடை அணிவித்து !
எனது காயத் தடங்களோடு
ஒப்பனை செய்
என் தோற்றத்தை !
வெற்றிப் பணியிலும்
வீணான பணியிலும்,
ஆசீர்வதி உன் அடிமையை !
புதைய வேண்டா மென்
இதயத்தில் வேதனைகள் !
வையகத்தின் யுத்தக் களத்
துயர்களைத் தாங்கும்
வலுவைத் தந்து
விடுதலை செய் என்னை !
************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 28, 2008)]
தாகூரின் கீதங்கள் – 27
விடுதலை கொடு எனக்கு !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உலகத்தின் கொடூர எடைக்கோல்
கணிப்பிலும் கிடைக்கும்
உதைக்கு மத்தியிலும் தவிக்கிறேன்
இப்போது !
என் தோற்றத்தை எழிலாக
ஒப்பனை செய்யும்
கழுத்தணி, காதணி, வளையல்,
பொன்னா பரணம்
அனைத்தும் அகற்றினேன் !
உன்னாசைக் கரத்தில் உள்ள
வீரக்குறி அம்புகள்
தீரா என் நடுக்கத்தை
வேரறுக்க நெருங்கட்டும்.
யுத்தத் தளபதியே !
போரா யுதங்களைக் கையாளத்
தாராய் எனக்குப் பயிற்சி !
கடும்பணி புரியத் தந்தை போல்
கட்டளையிடு
கருணை என்மேல் பூண்டு.
கோர வலிக்கு அனுதாப மின்றி
பளுவான பொறுப் பளித்து
பாராட்டு என்னை புதிய
போருடை அணிவித்து !
எனது காயத் தடங்களோடு
ஒப்பனை செய்
என் தோற்றத்தை !
வெற்றிப் பணியிலும்
வீணான பணியிலும்,
ஆசீர்வதி உன் அடிமையை !
புதைய வேண்டா மென்
இதயத்தில் வேதனைகள் !
வையகத்தின் யுத்தக் களத்
துயர்களைத் தாங்கும்
வலுவைத் தந்து
விடுதலை செய் என்னை !
************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 28, 2008)]
- பத்து கவிதைகள்
- அன்பு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் !
- தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு
- கிணத்தினுள் இறங்கிய கிராமம்
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?(கட்டுரை: 27)
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)
- தாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு !
- மன மோகன சிங்கம்!
- நூல் வெளியீட்டு விழா
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்
- கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம்
- உண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”
- இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா
- நாசமத்துப் போ !
- பெயரிலி!
- ஹெண்டர்சன் பட்டி மன்றம்
- FILCA Film festival schedule
- “Aalumai Valarchi” book release function
- ‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்
- பிறந்த நாள்
- பெயர் முக்கியம்!
- குரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!
- ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்
- ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா
- தீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9
- கடல் மீன்
- அவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது !
- காதலும் காமமும்
- நாய்கள்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3
- சார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”
- பெயர்வு: புலமும்! புலனும்?
- Last Kilo byt – 13 : ஆடை..
- நம் பையில் சில ஓட்டைகள்
- ஒப்பனை உறவுகள்
- ’புத்தகங்கள்’
- கவிதைகள்
- எத்தகைப் படைப்பு இந்த மனிதன் !
- இலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)