காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நேரம் முழுவதிலும் அப்பாவி தன்னையே – உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் !
தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால் – பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம் !

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடித் தங்கமே தங்கம் ! . . . .
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான் ? – அவை
யாவும் தெளிவு பெறக் கேட்டுவிடடீ !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 13
காதல் யாசகி நான் !

கருமை நிறக் கண்ணா ! அடியாள்
விரும்புவது உன் காதலில்
ஒரு பகுதியே !
என் குறைகள் என்ன வாயினும்
இன்பக் கடலாக நீ
எனக்குரியவன் ! உலகம்
என்ன தீர்ப்பை எனக்கு வழங்கினும்
என்னிதயத்தை மாற்றாது
எதுவும் ! உனது
வாயிதழ்கள் உதிர்க்கும்
வார்த்தை ஒன்றே போதும் !
பிறவிக்குப் பின்வரும் பிறவிகளில்
உன் காதல் சிறு பங்கை
நான் யாசிப்பவள் !
மீரா சொல்கிறாள்:
கருமை நிறக் கண்ணா !
அரணுக் குள்ளே நீ நுழைந்து
எல்லை தாண்டி
ஏந்திப் போய் விட்டாய்
இந்த மடந்தையை !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 1, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts