பைசால்
இடைவெளி
அதிகமான நாட்கள்
நாங்கள் பேசியிருக்கமாட்டோம்
வீட்டில்
தொலைபேசிக் கட்டணம் அதிகம்
தொடர்ந்து துண்டிக்கப்பட்ட தொலைபேசியை
தூக்கி
அது அடைத்துவந்த அறைக்குள் வைத்துவிட்டோம்
“இடைவெளி நிரப்புக”
என்ற சொல்லை என்னாலும் மறக்க முடியாது
இதைத்தான் நீ கடைசியாகப் பேசிவிட்டுப்போனாய்
பஸ்ஸில் போகும்போது
அடையாள அட்டை தவறியதாகச் சொன்னாய்
நான் நினைக்கிறேன்
இலேசில் நீ வீடுபோய் சேர்ந்திருக்க முடியாது
என் வீட்டு
தென்னை மரத்திற்குக் கீழ்
இப்போது யாருடனும்
நான் அமர்ந்திருப்பதில்லை
என்பதையும்
உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்
நாம்
அருந்துவதற்காக வந்த தேநீர்
சுடுகிறதென்று சொல்லி
கதிரையில் இருந்தவாறு கீழே வைத்தோம்
கோப்பையில் தேங்காய் விழுந்து
தேநீரைக் குடிகுடியென குடித்துவிட்டு
எழுந்து நடந்து சென்றது
ஒரு மனிதன்போல்
என் வீட்டு
தென்னை மரத்திற்குக் கீழ்
இப்போது யாருடனும்
நான் அமர்ந்திருப்பதில்லை
என்பதையும்
உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்
அவன்தான் தேங்காய் மனிதன் என்றாய்
நான்
அவன்தான் தேங்காய் மடையன் என்றேன் சிரித்துக் கொண்டு
அதன் பிறகு பேசமுடியாமல் போனது
அதனால் நானின்னும்
தொலைபேசி இணைப்பைப் புதுப்பிக்கவில்லை.
நள்ளிரவில் சிறுவன் கொக்குகளை உலர்த்துகிறான்
பகலின் குருடு நள்ளிரவு
இரவின் தெளிவு நடுப்பகல்
நள்ளிரவில் சிறுவன்
கொக்குகளை உலர்த்துகிறான்
நீரின் கதவுகள் திறந்து
உள்ளே நுழைய விருப்பம் தெரிவித்தது கொக்கு
அங்கே ஒரு மீன் கவிதையெழுதியது
“எனக்கு இரண்டு உதடுகள்
என்னை நானே முத்தமிடுகிறேன்
எனக்கு இரண்டு கண்கள்
என்னை நானே பார்க்கிறேன்
எனக்கு இரண்டு கைகள்
என்னை நானே தடவிக்கொள்கிறேன்
எனக்கு இரண்டு கால்கள்
நானே நடந்து செல்கிறேன் ஊரெல்லாம்”
மீன்களின் முத்தங்களைக் கொல்லுவது,
அதன் விரல்களிலிருக்கும் கவிதைகளைக் கொல்லுவது
என் பசியல்ல
என்று பாடிக்கொண்டு பறந்தது கொக்கு
பசியோடிருந்த சிறுவன் அதிர்கிறான்
நேற்று உலர்த்திய கொக்குகளுக்கு
உயிர் வாங்கச் செல்கிறான்
வழியில் தன்னுயிரை யாரோ எடுப்பதுபோல உணர்கிறான்
உயிர்த்திருடர்கள் இங்கு அதிகம்
திருடர்களுக்கு
இத்தனை உயிர்களும் அதிகம்
குடித்து முடிக்கமாட்டார்கள்
நான் ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் மனைவியின் தலையில் நடுவதற்கு
பசளை உண்ணத் தெரியாது
நீர் அருந்தத் தெரியாது
பராமரிக்கத் தெரியாது என்று அவள் சொன்னாள்
நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் காதலியின் தலையில் நடுவதற்கு
இன்று
அது நீண்டு வளர்ந்து
நிலாக் காலங்களிலும்
குளிர் காலங்களிலும்
என் முகம் முழுவதையும் மூடிக்கொள்கிறது
பைசால், இலங்கை
athanaal@gmail.com
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5
- வீடு
- அஷ்டாவதானம்
- நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ? (கட்டுரை: 23)
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !
- தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்
- அவன்
- கோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி
- பாகிஸ்தான் பாரதி
- ஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- ‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி
- முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு
- விரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008
- குழந்தை
- தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு
- அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்
- மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்
- தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று
- “நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”
- “ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”
- ஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்
- கழுதை வண்டிச் சிறுவன்
- நடை
- ஜனவரி இருபது
- மன்னியுங்கள் தோழர்களே…
- கடவுள் தொகை
- தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்!
- பின்னை தலித்தியம்
- நினைவுகளின் தடத்தில் – (7)
- கவிதைகள்
- என் வீடு
- கர்நாடகம் தமிழகம்
- அடுக்குமாடி காலணிகள்
- கடவுள் வந்தார்
- ஆறு கவிதைகள்
- காட்டாற்றங்கரை – 1