கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

விழியன்


நாடகம் நடுவே

உடைந்து கொண்டுதானிருக்கின்றது
காரணங்களை தானே உருவாக்கியபடி
தூரத்தே நிகழும் உடைப்புகள்
ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
கனக்கிறது கசிவுடன்
யாருக்காக வருந்துவது?
அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல்
இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன்
வலிகள் கொடுத்த வலுவில்



குழந்தை(பருவம்)

உன் பூனையும் என் புறாவும்
சண்டை போட்டதன் பின் திட்டியதற்கா?
கேரம் போர்டில் தோற்றுப்போனதற்காய்
கலைத்துவிட்டு மொண்டியடித்து ஓடிவிட்டதற்கா?
மாமா கொடுத்த பம்பர கயிறை
நான் மறைவாய் ஒளித்து வைத்தற்கா?
எதற்கு உம்மென இருக்கிறாய்
சாரி அக்கா
ஓரமாகவே உட்கார்ந்து என்ன தான் செய்கிறாய்?
நான் உன்னிடம் ஏன் வரக்கூடாது?
அக்கா என்னுடன் விளையாட வருவியா?


http://vizhiyan.wordpress.com
umanaths@gmail.com

Series Navigation

author

விழியன்

விழியன்

Similar Posts