காற்றினிலே வரும் கீதங்கள் – 12 உறங்காமல் விழித்துள்ளவள் !

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பாலும் கசந்ததடீ ! – சகியே
படுக்கை நொந்ததடீ !
கோலக் கிளிமொழியும் – காதில்
குத்தல் எடுத்தடீ !

உணவு செல்ல வில்லை – சகியே
உறக்கம் கொள்ள வில்லை !
மணம் விரும்ப வில்லை ! – சகியே
மலர் பிடிக்க வில்லை !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 12
உறங்காமல் விழித்துள்ளவள் !

உலகம் உறங்கிய போதினும்
விழித்துக் கிடக்கிறாள் தோழீ
ஒதுக்கப் பட்ட
ஒருத்தி
அரண்மனைக் குள்ளே
பலகணிக் கருகே
விண்மீன்களை
எண்ணிக் கொண்டு !
கண்ணீர்த் துளிகளை
யாரோ ஒருத்தி
ஆரமாய்த் தொடுக்கிறாள் நூலில்
கோர்த்து !
உறங்காமல் கிடக்கிறாள்
ஒதுக்கப் பட்ட
ஒருத்தி !
திடீரென மறைந்தது
இரவு !
இன்ப இராப் பொழுதை
இழந்து போனாள்
மீரா !
பெருந்துயர் களைந்திடும்
கருமேனியானைச்
சேராமல் தவிக்கிறாள்
மீரா !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 24, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts