காற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் !

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் ?
கண்ண என்னகத்தே
கால்வைத்த நாள்முதலாய்,
எண்ணம் விசாரம்
எதுவும் அவன் பொறுப்பாய்
செல்வம், இளமாண்பு
சீர் சிறப்பு, நற்கீர்த்தி
கல்வி, அறிவு, கவிதை சிவயோகம் . . .
ஒளிசேர் நலமனைத்தும்
ஓங்கி வருகின்றன காண் !
கண்ணனை நான் ஆட்கொண்டேன் !
கண்கொண்டேன் !

பாரதியார் (கண்ணன் என் சேவகன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 10
சரண் புகுந்திடுவாள் !

எனக்குரிய கருமேனி யானைத்
எட்டாத இடத்திலே வைத்தார் !
ஆனால் நான்
அவனின்றி வாழ்வேனா ?
சாதுக்களோடு
போவதும் வருவதுமாய்
திரிந்து கொண்டு
பூரிப்போடு வாழ்கிறேன்
கிரிதரனோடு !
உலக எலிப் பொறியில்
பிடி படாது
நடமாடி வருகிறேன் !
உடம்பே என் உடமை ! ஆயினும்
அடகு வைப்பேன் அதனை !
எனது மனது என்றோ
களவு போனது !
மோகத்தில் மூழ்கி
மீரா ஓடுகிறாள்
உளறிடும்
ஊராரை எல்லாம் விட்டு !
சரண் புகுந்திடுவாள்
மரண மில்லா
கருநிறத்தா னோடு !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 17, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts