கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

ரசிகவ் ஞானியார்


குறுக்குச் சுவர்

ஏறவிடாது வழிமறித்து
பேருந்தின் படிக்கட்டில்
தொங்கும் பயணிகளை
சில சமயம்
தள்ளிவிட்டுவிட்டுதான்
மேல் ஏற வேண்டியதிருக்கிறது

வாழ்க்கையிலும் அப்படித்தான்



இருக்கவோ ? எழவோ?

இருக்கையின் நுனியில் ….
மனப்போராட்டம் !

பெரியவரின் தள்ளாமை …
தர்மசங்கடப்படுத்துகிறது !

இருக்கவோ ? எழவோ?

எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல ..
இறக்கத்திற்காக !

எனது நிறுத்தத்திலேயே …
மனிதநேயமும் இறங்கிப்போனது!



rasikow@gmail.com
– ரசிகவ்

Series Navigation

author

ரசிகவ் ஞானியார்

ரசிகவ் ஞானியார்

Similar Posts