தீபச்செல்வன்
நகரங்களில் கேட்பதில்லை
கிராமங்களின் பாடல்
குடிசை முகத்துடன்
கிராமங்கள்
நீண்டுகொண்டு போயின
அங்குதான்
காற்று வசிக்கிறது.
புதுமைகளை
நாகரிகங்களை
ஆதியில்
கிராமங்களே பிரசவித்தன
கிராமங்களின் ஜீவனில்
நகரங்கள் நடமாடின
கிராமங்களின் செய்தி
எங்கும் கேட்காமல்
குடிசையில் மண்டிக்கிடக்கிறது.
நகரங்களில்
வருத்தங்கள் மனிதரோடு
உலவுகின்றன
மின் கம்பங்களின் சுற்றில்
மனிதர்கள்
நிம்மதியை தொலைத்து
திரிகிறார்கள்.
கிராமங்களில் விளக்குகள்
நிரம்பிய குடிசைகளில்
இருள் நிரம்பிய
புத்தங்களின் குரல்கள்
தேங்கிக்கிடக்கின்றன.
நாகரிகங்கள்
மனிதரை
கருனையை
கொன்று தீர்த்தன.
கிராமங்களிடம்
நதி இருக்கிறது
நதியின் தாகத்திற்கு
கிராமம் அருக்கிறது
நதியைப்போல ஆறுதல் இல்லை
நதி தாயைப்போல
கிராமங்களை வளர்த்தன
கிராமங்கள்
மனிதர்கள்
நாகரிகங்கள்…எல்லாம்
நகரங்களாகியபோது
கிராமங்கள் துரத்தப்பட்டன.
நைல் நதியை விடவும்
குவாங்கோ நதியை விடவும்
எனது நதி மேலானது.
படையெடுத்து பெயர்க்கப்பட்ட
நதிக்கிராமங்களைப்போல
எனது கிராமம் விழுங்கப்படக்கூடாது.
கிராமங்களின் விடுதலை இருள்
கிராமங்களின் அமைதி நிழல்
கிராமங்களின் வலிமை ஒளி
கிராமங்களின் வெள்ளை பசுமை
எல்லாவற்றிலும்
எனது தோற்றம் பிணைந்து கிடக்கட்டும்
நதியில் பசியாறலாம்.
பசுமை வழியும்
கிராமத்தின் முகத்துடன்
நமது ஆயுள் தீரும் வரை
பசியாறுவோம்
கிராமங்களின் தெருவில்.
deebachelvan@gmail.com
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்
- உயிர்த்தெழும் ஔரங்கசீப்
- அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி
- SR நினைவுகள்
- அமரர் சுஜாதா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ? (கட்டுரை: 20)
- தேம்ஸ் நதியின் புன்னகை
- இடமாற்றம்: சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம்
- வஹ்ஹாபி வெளிப்படுத்தும் அடிப்படை முகமதிய மனோபாவம், இஸ்லாமிய தர்க்கம்
- உடம்பு இளைப்பது எப்படி?
- நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து
- தாகூரின் கீதங்கள் – 21 எல்லாமே வழங்கி உள்ளாய் !
- ஜெய்பூர் கால்— டொக்டர் பிரமோத் கரன் சேத்தி மறைவு
- பதங்களும் ஜாவளியும் – பக்தியும் சிருங்காரமும்
- ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாக அமைந்துவிட்டது
- பேராசிரியர் சுந்தரசண்முகனார் வாழ்வும் பணியும்(13.07.1922 -30.10.1997)
- அதிகாலை.காம்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- மகளிர்தினக் கவியரங்கம், திருச்சி
- குதிரை ஓட்டி
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 2
- போட்டோ
- முலையகம் நனைப்ப விம்மி அழுதனள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 2
- நினைவுகளின் தடத்தில் (6)
- மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்
- உலகை குலுக்கும் உண்டியல் புரட்சியாளர்கள்
- சம்மந்தமில்லை என்றாலும் – விவாதங்கள் விமர்சனங்கள்- சுஜாதா
- சுயமோகிகளுக்கு…..
- ஆடுகளம்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 10 நிலையற்ற வாழ்வு !
- கிராமங்களின் பாடல்
- “வார்த்தை” மாத இதழ் சந்தா – சிறப்புச் சலுகைகள்