காற்றினிலே வரும் கீதங்கள் – 10 நிலையற்ற வாழ்வு !

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



தூண்டிற் புழுவினைப்போல் – வெளியே
சுடர் விளைக்கினைப்போல்
நீண்ட பொழுதாக – எனது
நெஞ்சம் துடித்ததடீ !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

காற்றினிலே வரும் கீதங்கள் – 10
நிலையற்ற வாழ்வு !

உலகில் இந்த வாழ்வு
நிலையற்றது !
ஏனந்த பாரத்தைச் சுமக்கிறாய் ?
தந்தை தாய் உறவிலே
சந்ததி பிறக்கும் !
ஆக்கப்படும் வாழ்வுக் கடலில்
தாக்குவது கர்மா !
வெகுமதி யாகப்
பொருள் மட்டும் சேமித்து
வீணாக்குவர் வாழ்வினை
மானிடர் !
வாங்குவதும், விற்பதுவுமான
அவரது வாழ்வு
பயனற்றது !
கீதங்களாய்ப் பாடுகிறேன்
கிரிதரனின்
காதல் வாழ்க்கையை !
பித்தோடு ஆடி வருகிறேன்
சித்தர்க ளோடு !
ஏதும் என்னைப்
பாதிக்கப் போவ தில்லை !
மீரா சொல்கிறாள் :
கார்முகில் வண்ணா ! உன் சக்தி
தூண்டி விட்டு
எல்லையைத்
தாண்டுவது நான்தான் !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 9, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts