நாகரத்தினம் கிருஷ்ணா
இழுத்துச் சாத்தியே பழக்கப்பட்ட
இலக்கிய கதவுகள்
எப்போதேனும் படபடக்கிறபோது
கவனித்திருக்கிறேன், காற்றில் நீயும்
கலந்திருப்பாய்.
தமிழ் கூறும் நல்லுலகமில்லையா?
இழவுப்பேச்சின் நெடி கொஞ்சம்
தூக்கலாகத்தான் இருக்கும்
நிகழ்த்தப்படும் ஒப்பாரியில்கூட
ஒன்றிரண்டு வசவுகள் கலக்கக்கூடுமென்ற
உனக்கில்லா கவலைகள் எனக்குண்டு!
எழுத்து முதலீட்டில் சிக்கனமிருந்தும்,
குடிசைத் தொழிலாகவிருந்த கனவுகளை
வெகுசன விநியோகத்திற்கென்று
தொழிற்சாலைக்குக் கொண்டுசெல்ல
உன்னால் மட்டுமே முடிந்தது,
கன்னித் தமிழ் கவர்ச்சித் தமிழானதும்
‘பஞ்சகச்சமும், மடிசாரும்
பெல்பாட்டம், டீ ஷர்ட்டானதும்
நினைவில் இருக்கிறது,
நேற்று நடந்ததைப்போல.
‘சசி காத்திருக்கிறாள்’ என்றெழுதவும்
சங்கத் தமிழுக்கு உரைசொல்லவும்
நீ வரம்பெற்ற பராபரத்தைத்தேடி
நானும் அலைந்தது சத்தியம்.
மறுபிறவியில் உன் ஒருவன் விஷயத்தில்
எனக்கு நம்பிக்கை இருக்கிறது,
அவ்வப்போது தமிழிலக்கியத்திற்கு
புதுமைப் பித்தன்கள் வேண்டுமே!
எழுபதில் இருபதின் தூக்கத்தைக் கெடுத்த நீ,
இன்றுன் மரணத்தால் புதுபித்திருக்கிறாய்
ஸ்ரீரங்கத்திற்கு நேர்ந்த இரண்டாவது தீவிபத்து
இம்முறை நெஞ்சோடு, என் எழுத்தும் வேகிறது!
சம்பிரதாய அஞ்சலிகள் காகிதச் சங்கிலிகளாகும்
அபாயத்தை அறியாமலேயே இடிபாடுகளுக்கிடையில்
இந்த வண்ணத்துப்பூச்சி முட்டிமோதுகிறது.
nakrish2003@yahoo.fr
- சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்
- சுஜாதா – தமிழ் சூரியன்
- மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்
- Last Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி
- சம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1
- ‘ரிஷி’ யின் கவிதைகள்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- சுஜாதா என்றொரு தமி்ழ்ச்சுரங்கம்
- கவிதை
- இது பகடி செய்யும் காலம்
- ரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல
- தாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் !
- தும்பைப்பூ மேனியன்
- ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1
- தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
- மீ ட் சி
- ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்!
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
- “கட்சி கொடிகளும் மரங்களும்”
- மெழுகுவர்த்தி
- கவிதை
- வெளிச்சம்
- திப்பு சுல்தான், காந்திஜி, பாரதி
- மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா
- பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம்
- வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின ? (கட்டுரை: 19)
- பாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)
- மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
- கறுப்பு தேசம்
- குப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்…………14 அ.ச.ஞானசம்பந்தன்
- சுஜாதா
- சிலுவைகள் தயார்…
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்
- வராண்டா பையன்