காற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் !

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


புல்லாங் குழல்கொண்டு வருவான் – அமுது

பொங்கித் ததும்பும்நற் கீதம் படிப்பான் !

கள்ளால் மயங்குவது போல – அதைக்

கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம் !

பாரதியார் (கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை)

காற்றினிலே வரும் கீதங்கள் – 9

புல்லாங்குழல் ஊதுவோன் !

ஆற்றங் கரைப் பக்கத்திலே

கேட்டது

புல்லாங் குழலிசை !

உடைந்து போன இதயமே !

புல்லாங் குழல் வாசிப்போன்

விண்ட உனது நெஞ்சைச்

சேர்ப்பான் என்ற

தீர்மான

நம்பிக்கையா உனக்கு ?

ஆற்று நீரும் கருமையானது !

கரிய நிறத்தில் ஆடை அணிந்த

கிரிதரன் இன்னும்

கறுப்பாய்த் தோன்றுகிறான் !

மூங்கில் தண்டு போன்ற

புல்லாங் குழலில்

பொங்கி எழும்

புனித இசைக் கானம்

மீராவின் மனதைக்

கிரங்க வைக்கிறது !

பிரபு கிரிதரா !

தடுமாறும் இந்த ஆத்மாவை

விடுவிப் பாயா இந்தத்

தவிப்பிலிருந்து ?

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire

(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern

Harper Prennial

A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 3, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts