வெளிச்சம்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

பனசை நடராஜன், சிங்கப்பூர்


எல்லோரையும், நின்று
ஏறிட்டு ப் பார்த்து,பின்பு
நடந்து கொண்டேயிருக்கிறது
வெளிச்சம்…!

இறுகக் கண்களை மூடி
இருட்டுக் குழிக்குள்ளே
கிடப்பதாய் புலம்புவோரை…

எட்டும் தூரத்தில்
இருப்பதை அறிந்தும்
வெறித்து பார்த்தபடி நிற்போரை…

மாயம் என்று சொல்லி
வேறுபக்கம் திரும்பி நின்று
கனவுகளில் தேடுவோரை
அது கண்டு கொள்வதில்லை…!

உணர்ந்தோ,உருவாக்கியோ
நெருங்கும் சிலரையே
ஓடிச்சென்று
தழுவிக் கொள்கிறது…!

இப்போதுகூட
எனக்கான வெளிச்சம்
காத்திருந்து விட்டுக்
கடந்து போயிருக்கலாம்..!!!

Series Navigation

author

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்

Similar Posts