அனாமிகா பிரித்திமா
எப்படி ?
எப்படி முடிந்தது … எப்படி?
என் செல்லமே என்றீர்கள்…
என் கண்ணே என்றீர்கள்…
என் கண்ணம்மா என்றீர்கள்…
என் உயிரே என்றீர்கள்…
என் பிரியமானவளே என்றீர்கள்…
என் பாசமிகு பைங்கிளியே என்றீர்கள்…
என் பிரியமான ஒருத்தி அம்மா நீ என்றீர்கள்…
என் இதயத்தில் நிரந்தரமாக குடியிருப்பவளே என்றீர்கள்…
என்றும் மாறா நேசத்திற்குரியவளே என்றீர்கள்…
இந்த ஜென்மத்தில் நீ தான் என் மனைவி என்றீர்கள்…
எல்லாவற்றையும் மறக்க,மறைக்க…
எப்படி முடிந்தது … எப்படி?
மறந்ததாக சொல்லி…
என்னை ஏமாற்றுகிறீர்களா?…
இல்லை…
மறைப்பதாக நினைத்து உங்களையே… ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்களா?
படைப்பு…
அரங்கம் நிறைந்திருந்தது…
அனைவரும் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தனர்…
அருமையாக நிகழ்ச்சியை தொகுத்தேன் நான்…
அவரது முதல் குழந்தை (படைப்பு) என் கையில்…
அமோகமாக படைப்பு வெளியானது…
ஆனந்தத்தின் உச்சத்திற்கே சென்று விட்டேன் நான்…
ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் இன்று…
அவர் அடுத்த படைப்பு வெளியீட்டுக்காக…
அழைக்க மாட்டார், என்னை நிச்சயமாய் என்று தெரிந்தும்…
உன்னோடு வாழாத…
என் முதல் திரை அனுபவம் …
நடிப்பதில் அல்ல…
படம் பார்ப்பதில்…
படம் மிகவும் பிடித்திருந்தது…
கதைக்காக அல்ல…
என் கணவருடன் பார்த்ததற்காக…
படத்தில் வந்த ஒரு பாட்டின் போது என்னவர் கூறியது…
இந்த பாட்டின் வரிகள் என்னை மனதில்…அல்ல…
என் மனதில் உன்னை வைத்து எழுதியது போன்று இருக்கிறது…
படத்தின் மற்றொரு பாடல் மிகவும் பிடித்தது…
எனக்கா அல்ல…
என்னவருக்காக… எனக்குப் பிடித்திருந்தது…
பாடல் எங்களுக்காகவே எழுதப்பட்டது போன்று இருந்தது…
இல்லையே…
படத்தில் நடித்தவர்கள் கூட இன்று இணைபிரியா ஜோடிகள்…
வாழ்க்கையில்…
ஆனால் நாங்கள்…?
– அனாமிகா பிரித்திமா
anamikapritima@yahoo.com
- சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்
- சுஜாதா – தமிழ் சூரியன்
- மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்
- Last Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி
- சம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1
- ‘ரிஷி’ யின் கவிதைகள்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- சுஜாதா என்றொரு தமி்ழ்ச்சுரங்கம்
- கவிதை
- இது பகடி செய்யும் காலம்
- ரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல
- தாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் !
- தும்பைப்பூ மேனியன்
- ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1
- தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
- மீ ட் சி
- ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்!
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
- “கட்சி கொடிகளும் மரங்களும்”
- மெழுகுவர்த்தி
- கவிதை
- வெளிச்சம்
- திப்பு சுல்தான், காந்திஜி, பாரதி
- மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா
- பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம்
- வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின ? (கட்டுரை: 19)
- பாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)
- மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
- கறுப்பு தேசம்
- குப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்…………14 அ.ச.ஞானசம்பந்தன்
- சுஜாதா
- சிலுவைகள் தயார்…
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்
- வராண்டா பையன்