கவிதை

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

அனாமிகா பிரித்திமா


எப்படி ?

எப்படி முடிந்தது … எப்படி?
என் செல்லமே என்றீர்கள்…
என் கண்ணே என்றீர்கள்…
என் கண்ணம்மா என்றீர்கள்…
என் உயிரே என்றீர்கள்…
என் பிரியமானவளே என்றீர்கள்…
என் பாசமிகு பைங்கிளியே என்றீர்கள்…
என் பிரியமான ஒருத்தி அம்மா நீ என்றீர்கள்…
என் இதயத்தில் நிரந்தரமாக குடியிருப்பவளே என்றீர்கள்…
என்றும் மாறா நேசத்திற்குரியவளே என்றீர்கள்…
இந்த ஜென்மத்தில் நீ தான் என் மனைவி என்றீர்கள்…

எல்லாவற்றையும் மறக்க,மறைக்க…
எப்படி முடிந்தது … எப்படி?
மறந்ததாக சொல்லி…
என்னை ஏமாற்றுகிறீர்களா?…
இல்லை…
மறைப்பதாக நினைத்து உங்களையே… ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்களா?


படைப்பு…

அரங்கம் நிறைந்திருந்தது…
அனைவரும் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தனர்…
அருமையாக நிகழ்ச்சியை தொகுத்தேன் நான்…
அவரது முதல் குழந்தை (படைப்பு) என் கையில்…
அமோகமாக படைப்பு வெளியானது…
ஆனந்தத்தின் உச்சத்திற்கே சென்று விட்டேன் நான்…
ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் இன்று…
அவர் அடுத்த படைப்பு வெளியீட்டுக்காக…
அழைக்க மாட்டார், என்னை நிச்சயமாய் என்று தெரிந்தும்…



உன்னோடு வாழாத…

என் முதல் திரை அனுபவம் …
நடிப்பதில் அல்ல…
படம் பார்ப்பதில்…

படம் மிகவும் பிடித்திருந்தது…
கதைக்காக அல்ல…
என் கணவருடன் பார்த்ததற்காக…

படத்தில் வந்த ஒரு பாட்டின் போது என்னவர் கூறியது…
இந்த பாட்டின் வரிகள் என்னை மனதில்…அல்ல…
என் மனதில் உன்னை வைத்து எழுதியது போன்று இருக்கிறது…

படத்தின் மற்றொரு பாடல் மிகவும் பிடித்தது…
எனக்கா அல்ல…
என்னவருக்காக… எனக்குப் பிடித்திருந்தது…

பாடல் எங்களுக்காகவே எழுதப்பட்டது போன்று இருந்தது…
இல்லையே…

படத்தில் நடித்தவர்கள் கூட இன்று இணைபிரியா ஜோடிகள்…
வாழ்க்கையில்…

ஆனால் நாங்கள்…?

– அனாமிகா பிரித்திமா


anamikapritima@yahoo.com

Series Navigation

author

அனாமிகா பிரித்திமா

அனாமிகா பிரித்திமா

Similar Posts