கவிதை

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

ந. அனுராதா


விடியும் வரை நீளும் இரவை
சுவைக்கும் கனவுகள்
கொட்டிக்கிடக்கும் பனிப்போர்வையின்
ம‌றைவில் ம‌னித‌ முக‌ங்க‌ள்
சொல்லும் சொல்லின் ச‌த்த‌ம்
காற்றோடு க‌ரைந்துவிடுகிற‌து

சொல்லாத‌வை ச‌ற்றுமுன் சுவைத்த‌
ஆழ் முத்த‌த்தின்
முக‌த்து வ‌டுவாய்

வ‌க்கிர‌ம் நிறைந்த‌ க‌ண்ணாய்
கோப‌ம் விடைக்கும் மூக்காய்
உயிர் கிழிக்கும் நாவாய்
எல்லாமாய்
ப‌திந்துவிடுகிறது

சுற்றிப்பார்க்க‌ வ‌ரும் கூட்ட‌ம்
ஒரு சார‌லில் கிள‌ம்பும் வாச‌னையாய்
மெல்ல‌ப் ப‌ர‌வுகிற‌து அறையினுள்

பெரும‌ழை விட்டுச்சென்ற‌
சாலையோர‌ த‌ண்ணீர் தேங்க‌லாய்

போகும் வாக‌ன‌ங்க‌ளின் க‌றுப்பு ஜ‌ன்ன‌ல்க‌ள் அறியுமோ
தேங்கும் நீரில் வாழும் விழிக‌ளை


anuradan@gmail.com

Series Navigation

author

ந. அனுராதா

ந. அனுராதா

Similar Posts