உஷாதீபன்
இழப்பு
எப்படிச் சொல்ல
அந்தச் சோகத்தை-மகனே!
உனக்கு
கிட்டிப்புள் விளையாட்டு
தெரியுமா?
கோலியாடியிருக்கிறாயா?
எத்துக் கம்பு?
செதுக்குச் சப்பா?
அட…
பம்பரமாவது விட்டிருக்கிறாயா?
பாண்டியாவது உண்டா?
பச்சைக் குதிரை தாண்டியிருக்கிறாயா?
இல்லையா?
போச்சு!@ அத்தனையும் போச்சு!!
என்ன படித்து என்ன பயன்?
உன்
இளமைக் காலங்கள்
இழந்த காலங்கள்
நீ எவ்வளவு பெரிய
வேலைக்குப் போனாலும்
எத்தனை கைநிறையச் சம்பாதித்தாலும்
இந்த இழப்பு
ஈடு செய்ய முடியாதது
உன்பாலான
இந்தத் தாக்கம்
எனக்கு
தீராத மனச்சுமைதான்!!
அவன்
அந்த வளாகத்தில்
நுழையும் போதெல்லாம்
கையை நீட்டுகிறான் அவன்
அவனின் பொழுது – இன்று
என்னிலிருந்து துவக்கமா? – அல்லது
ஏற்கனவே துவங்கி விட்டதா?
எப்படியாயினும்
விடுமுறை நாளன்று
என்னின் எதிர்பார்ப்பு
உண்டு அவனுக்கு
அவனின் அந்த எதிர்பார்ப்பும்
அறியும் என் மனது
மனசு ஊனமுறாமல்
போட்டுவிடவேண்டும்-அந்த
ஊனமுற்ற நண்பனுக்கு
தேவை
குறைந்த சம்பளம்
நிறைந்த மனது
அப்பாவுக்கு
நாற்பதாண்டு காலம்
மாடாய் உழைத்த அவர்
ஒரு நாளும்
மனம சலித்ததில்லை
ஆனால் இன்று
இருபத்தைந்து வருட சர்வீஸில்
ஏகமாய்ச் சலிக்கிறது மனது
அப்பா காலத்தில்
லஞ்ச லாவண்யமில்லை
இன்றோ
ஊடுபாவாகி –
புரையோடிப் போயிருக்கிறது
இதற்கு மத்தியில்
நேர்மையாய் சர்வீஸ் போட
குறைந்தபட்சம் அந்தச்
சலிப்பாவது வேண்டாமா??
- ஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 5
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி ? (கட்டுரை: 13)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 4 கண்ணனுடன் கலந்தேன் !
- தாகூரின் கீதங்கள் – 14 புதிய பந்தத்தில் பிணைத்திடு !
- வாணவேடிக்கைகளூம், உள்ளிடுங்கிய அறைகளும்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………..(10) த.ஜெயகாந்தன்
- சம்பந்தமில்லை என்றாலும் – சல்மான் ருஷ்டி யின் – தி மூர்‘ சு லாசுட் சை ( The moor s’ last sigh)
- திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!
- கவிதைகள்
- ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது.
- ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்
- காலத்தைக் கசக்கிப்பிழிந்து………(Geometrical dynamics of space-time-wrap)
- பங்குச் சந்தை பற்றிய உங்கள் பதிவு
- மகாத்மா காந்தியின் தவறுகள்
- தமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு
- ஜெகத் ஜால ஜப்பான்
- கத்திரிக்காயும் பங்கும்..
- நான் சொலவதும் இரண்டில் ஒன்றே!
- வடக்கு வாசல் பக்தி இசைவிழா
- கூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்!
- எண்ணச் சிதறல்கள் : நவீனத்துவம், உலகமயமாதல், பின் நவீனத்துவம், பிற்போக்கு நவீனத்துவம், வஹ்ஹாபி, இஸ்லாமிய மனக்குறைகள்
- மொழியாக்கம்
- அப்பா வீடு
- கவிதையின் அரசியல்– தேவதேவன்
- அம்மா
- சுகார்டோ
- கீறல்பட்ட முகங்கள்
- கவிதைகள்
- மீள்வு
- மலிவு எண்ணையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டியும்!
- அரசியலும் சமூகமும்: காந்தியடிகளும் மாசேதுங்கும் எதிர்த்த உயர்கல்வி – அறிவியல் தொழில் நுட்பம்
- நினைவுகளின் தடத்தில் – (4)
- மாத்தா- ஹரி முற்றும்) அத்தியாயம் -47