ந. அனுராதா
கனவில் நீந்தும் கள்வன்
கனவுகள் உதிரத்துவங்கும் ஒரு காலையில்
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
கூட்டுக்குள் ஒரு கள்வனைப் போல்
நுழைந்தான்
என் நேற்றின் மிச்சமானவன்
என் மூச்சின் உச்சத்தின்
ரகசியம் புரிந்து
என்னை அள்ளி வெளியே வீசி
தன்னை என்னுள் நிரப்பினான்.
நீண்ட மரங்கள் அடர்ந்த
ஒரு பனிச் சாலையில்
மெல்ல நடுங்கும் என் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறான்.
ஒற்றை விளக்கெரியும்
இருட்டுப் புள்ளியின் திசை நோக்கிப்
பயணம் புரிகிறோம்
ஒருவரோடு ஒருவர் பேசாமல்
என் கூடு தானே தன்னை
கிழித்துக் கொள்ள வாயிலில் காத்திருக்கிறது
உதிக்கும் சூரியன் பரப்பும்
செவ்விள காலை எனக்குள் விரிய
என் பனி மெல்ல உருகி முத்தாக
ஊர்வலத்துக்காய்
ஏந்தும் தோளுக்காய் பசியுடன்…
இமை மீறி நீந்தும் நீருடன்…
விரையும் குதிரை
இருண்ட குகையினுள்ளே
மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன
நினைவு எறும்புகள்
ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே
அந்நியமாய் நலம் விசாரணைகள்.
நடக்கும் போதே தூங்கிப்போன
குழந்தையாய்
தோளில் தூக்கிக்கொண்ட உன் ஞாபக எச்சங்கள்
உள்ளே வழியும் வெண் ரத்தம்
நக்கிச்சுவைக்கும் நாக்காய்
நம் பிரிவின் மிச்ச நிமிடங்கள்
கண்ணில் தெறிக்கும் காதலுடன்
கைகள் வழியும் காமத்துடன்
உன் கன்னம் தீண்டிய
என் உள்ளங்கை முழுதும்
உனதான ரேகைகள்
விரிந்த கடலின் அலையின் மேல்
கதிரவன் இல்லா வானம் தேடி
விரையும் குதிரையாய்
நம் வாழ்க்கைக் கடிவாளம்
anuradan@gmail.com
- ஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 5
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி ? (கட்டுரை: 13)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 4 கண்ணனுடன் கலந்தேன் !
- தாகூரின் கீதங்கள் – 14 புதிய பந்தத்தில் பிணைத்திடு !
- வாணவேடிக்கைகளூம், உள்ளிடுங்கிய அறைகளும்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………..(10) த.ஜெயகாந்தன்
- சம்பந்தமில்லை என்றாலும் – சல்மான் ருஷ்டி யின் – தி மூர்‘ சு லாசுட் சை ( The moor s’ last sigh)
- திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!
- கவிதைகள்
- ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது.
- ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்
- காலத்தைக் கசக்கிப்பிழிந்து………(Geometrical dynamics of space-time-wrap)
- பங்குச் சந்தை பற்றிய உங்கள் பதிவு
- மகாத்மா காந்தியின் தவறுகள்
- தமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு
- ஜெகத் ஜால ஜப்பான்
- கத்திரிக்காயும் பங்கும்..
- நான் சொலவதும் இரண்டில் ஒன்றே!
- வடக்கு வாசல் பக்தி இசைவிழா
- கூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்!
- எண்ணச் சிதறல்கள் : நவீனத்துவம், உலகமயமாதல், பின் நவீனத்துவம், பிற்போக்கு நவீனத்துவம், வஹ்ஹாபி, இஸ்லாமிய மனக்குறைகள்
- மொழியாக்கம்
- அப்பா வீடு
- கவிதையின் அரசியல்– தேவதேவன்
- அம்மா
- சுகார்டோ
- கீறல்பட்ட முகங்கள்
- கவிதைகள்
- மீள்வு
- மலிவு எண்ணையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டியும்!
- அரசியலும் சமூகமும்: காந்தியடிகளும் மாசேதுங்கும் எதிர்த்த உயர்கல்வி – அறிவியல் தொழில் நுட்பம்
- நினைவுகளின் தடத்தில் – (4)
- மாத்தா- ஹரி முற்றும்) அத்தியாயம் -47