தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
புனித மீராவின் கீதங்கள் : 1
கடைவீதியில் வாங்கிய கருமேனியான் !
கடைவீதிக்குச் சென்று, நண்பனே !
கருமேனி யானை வாங்கி வந்தேன் !
களவெனச் சொல்லட்டும் !
ஏமாற்று எனச் சொல்லட்டும் !
முரசடித்து வாங்கி வந்தேன்
கருப்பெனச் சொல்லட்டும் !
வெளுப்பெனச் சொல்லட்டும் !
பாரமெனச் சொல்லட்டும் !
பளுவில்லை எனச் சொல்லட்டும் !
தராசில் நிறுத்தே வாங்கி வந்தேன் !
ஈடாகத் தந்தேன் என் இல்வாழ்வை !
என் நகர வாழ்வை ! என் நகைகள் எல்லாம் !
மீரா சொல்கிறாள்:
பிரபு கிரிதரன் தன் கணவன் என்று !
உறங்கும் போது அருகில் இரு,
உறுதி சொல்ல வில்லையா
முன் பிறப்பில் நீ எனக்கு ?
(ஹிந்தி மூலம் : ஜடாயு)
(ஆங்கில மூலம் : ராபர்ட் பிலை)
புனித மீராவின் கீதங்கள் : 2
என்னைப் பிரிந்து செல்லாதே !
விட்டுச் செல்லாதே ! விட்டுச் செல்லாதே !
தொட்டுத் தொழுவேன்
நின்னிரு பாதங்களை !
என்னை அர்ப்பணம் செய்தேன்
உன்னிடமே !
பக்திப் பாதைக்குத்
திக்குத் தெரிய வில்லை
எவருக்கும் !
எங்கு செல்வதென
எனக்கொரு வழிகாட்டு !
எந்தன் உடலை ஓர்
சந்தனக் கட்டு
வாசனை வத்தியாய் மாற்றிட
ஆசை எனக்கு !
தீயால் வத்தியை ஏற்றிவை !
சாய்ந்து நான் வீழ்ந்து
சாம்பலாய்ப் போன பிறகு என்
தூசியை உன் மேனியில்
பூசிக்கொள் !
மீரா சொல்கிறாள்:
பிரபு கிரிதரா !
என்னிடம் உள்ளது ஒரு
மின்மினித் தீபம் !
அதனைப்
பின்னிக் கொள்ள விழைவேன்
உன் ஒளியுடன் !
(ஹிந்தி மூலம் : ஜடாயு)
(ஆங்கில மூலம் : ராபர்ட் பிலை)
- ஜெயமோகனும் இயல் விருதும்
- தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !
- கடைசி கிலோ பைட்ஸ் – 6 [ Last Kilo bytes -4 ]
- கருணாகரன் கவிதைகள்
- போய்விடு அம்மா
- சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )
- ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 13)
- மீராவின் கவிதை
- மழை பிடிக்காது! மழை பிடிக்காது!
- பட்டுப்பூவே !
- ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை
- கவிதைகள்
- இரு நாட்டிய நிகழ்வுகள்
- இரண்டில் ஒன்று
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
- சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.
- கொட்டாவி
- கடிதம்
- ஊர் சுற்றிய ஓவர் கோட்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4
- மொழி
- மாத்தா- ஹரி அத்தியாயம் -46
- தம்மக்கள்
- மாலதி மாற மாட்டாள்!
- வானபிரஸ்த்தாசிரமம்
- தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.
- திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008
- நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்
- எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.
- பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?
- இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்
- குடியரசுதின சிறப்புக் கட்டுரை
- இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2
- காற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு !
- திருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்