உஷாதீபன்
“தவறியவர்களுக்கு”
வேலை கிடைக்கும் முன்
வேலை வேலை என்று அலைந்தோம்
கிடைக்குமோ கிடைக்காதோ என்று
ஏங்கினோம்
கிடைக்காமலே போய் விடுமோ என்று
பயந்தோம்
ஓடி ஓடி விண்ணப்பங்கள்
வாங்கினோம்
தேடித் தேடித்
தேர்வுகள் எழுதினோம்
தேறினாலும் நழுவிடுமோ
என்று அஞ்சினோம்
விரட்டி விரட்டி
நேர்முகம் கண்டு
இன்று
கைப்பிடியில் ஒரு
அச்சாணி
கால் பதித்து நிற்கும்
தடம்
எல்லாம் சரி!
காலக் கணக்கை
அறுதியிட்டதுபோல்
கடமைகளையும் உணர்ந்தோமா?
சார்! இந்த ரிப்போர்ட்டை
மானேஜர்
ரெடி பண்ணச் சொன்னாரு
இன்னைக்கே அனுப்பணுமாம்!
அட! வையப்பா!!
அதுக்கென்ன இப்ப அவசரம்?
அவருக்கு வேறே வேலையில்லை?
எங்கிருந்து வந்தது
இந்த மெத்தனம்?
பிறகு பார்ப்போம்…
வந்திருக்கிறார்
போய்ப் பார்ப்போம்
நண்பர் சொன்னார்
நறுக்காக…!
எதற்கு? என்ற
என்னின் கேள்விக்கு -ஒரு
அறிமுகம்தான்
நம்மை
அறியவைக்க என்றார்
வேடிக்கைதான்
அவரை நான்
அறிந்தது -அவரின்
எழுத்தின் பேரில்
பிறகென்ன நேரில்?
அதுபோல்
என்னை அவர்
அறிவதும்
அறிய வேண்டியதும் – என்
எழுத்தின் மூலம்தானே?
என்ன போய்ப் பார்ப்பது?
பேசட்டும் என் எழுத்து
பேசப்படட்டும் முதலில்
பிறகு பார்ப்போம்
நேரின் தேவையை!
தெரிந்ததுபோல்
காட்டிக் கொள்வதில்
இருக்கும் அவஸ்தை
‘தெரியாது’ என்று
சொல்லி விடுவதில்
இருக்கும்
அறியாமையைவிட
உயர்ந்ததாயின்
அந்த
அறியாமைதான்
எனக்கு
கௌரவம்!!
ushadeepan@rediffmail.com
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 12)
- தர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்
- புத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்
- தாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு !
- இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து
- தைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது? (உப்புத் தண்ணீர்)
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 3
- தமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு
- ஏழரைப்பக்க நாளேடு!
- எந்த ரகம்?
- திரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You
- எழுத்துக்கு அடையாளம்
- ஆய்வரங்கம் : புலம் பெயர் வாழ்வில் தமிழர்களும் அடையாளமும்
- மதிப்புக்குரிய ஜெயமோகனுக்கு….
- கீதாஞ்சலி பிரியதர்சினி கவிதைகள்
- கடவுள்களின் மடிகள்
- கவிதைகள்
- ஞாபகம்
- பொங்கல் வாழ்த்துக்கள்
- வாய்ப்பளிக்கும் வஹ்ஹாபிக்கு வந்தனம்
- ஹென்டர்சன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் 24-வது பட்டிமன்றம்
- வா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்
- பூஜ்ஜியம்
- நூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்
- மாத்தா- ஹரி அத்தியாயம் -45
- சாத்தானாகிவிடும் சாத்தானின் வழக்குரைஞர்
- படிப்பினைகள் – பாடங்கள் – கற்றது அரசியல்
- சந்திப்பின் சங்கதிகள்
- தடுத்தாலும் தாலாட்டு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே !
- வரித்துக்கொள்வோம் மரணத்தை
- யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்
- இவை பேசினால்….
- பிரியம்
- “இலக்கிய விருதுகளும் இழுபறிப்பாடுகளும்”
- “பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)
- சூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்
- ஹும்