ஞாபகம்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

துவாரகன்



இரவின் ராகத்தை மீட்கும்
பூச்சிகளின் ‘சில்’ லென்ற இரைச்சல்.
மெல்லத் திரை விலக்கி
என் உள்ளம் சேர்த்து வைத்த
உன் நினைவுப் பொதியின்
முடிச்சுக்களை
அவிழ்த்துக் கொட்டுகிறது.
அவை போத்தலிலிருந்து கொட்டிய
மாபிள்களாக,
நாலாபக்கமும் சிதறி வீழ்கின்றன.
உன் ஞாபகமாய் இருந்த
எல்லாத் தடங்களையும்
ஒவ்வொன்றாய்
நான் இழந்து விட்ட பின்பும் கூட@
மனிதர்களை இழந்த தெருக்கள் எல்லாம்
உனதான ஞாபகத்தில்…
மூச்சடைத்து, முகம் புதைத்து
மனது விம்மிப் போகிறது.
என்றாலும்,
மிக நிதானமாக
தன் உயிர்ப்பை ஞாபகப்படுத்தும்
என் வீட்டுச் சுவர்மணிக்கூட்டின்
ஓசையைப் போல்,
இயங்கிக் கொண்டிருக்கிறேன்.
இயங்கும் வரை.


mskwaran@yahoo.com

Series Navigation

author

துவாரகன்

துவாரகன்

Similar Posts