மதியழகன் சுப்பையா
வேடைக்குருதி கசியும்
புதுக்காயங்கள் பெற்று
இருட்டின் அடர்த்தியில்
மயிரினும் மெல்லிய வழித் தேடி
நுரையீரல் நீர்கனக்க
தனிமையாழியுள் ஆழ்ந்து
பசிக்கு மலம் புசித்து
பிணக்குழியில் படுத்துறங்கி
துன்பமொழி பிணாத்தி
தன்னோடு தான் பேசி
பொல்லாப் பொழுதுகளை
புலம்பியழுது போக்கி
நிராகரிப்பு எச்சிலால்
உடல் நனைந்து நாறி
உண்ட நஞ்சதுவோ
ஜீரணமாகி ஜீவன் தர
ஏதோ பிழைத்துக் கிடக்குமென்னை
வார்த்தைகளால் மீட்டெடுக்க
வருவாளோ தேவதை
உன் மவுனங்கள் புரியுமெனக்கு
காலையிலும் மாலையிலும்
தவறாது அழைத்துப் பேசும்
ஒழுங்கு
கூர்மையில் கிழிபடாது
பயணிக்கும் நத்தைபோல்
உரையாடல்களில் அத்தனை
கவனம்
தகாத-கூடாத- வேண்டாத
என தவிர்த்து; தேரும்
வார்த்தைகளில் வெளிப்படும்
அனுபவம்
அனுமதிக்க மன்னிக்க கோரி
விபரம் விசாரிக்கும்
குழைவு
குரல் மெலிகையில்
நடை தளர்கையில்
குறிப்பறிந்து நடக்கும்
கனிவு
விடு என்றால் விடவும்
கொடு என்றால் தரவும்
செய்யும் அடிபணிவு
இரும்புப் பந்தொன்றை
குரல்வளைக்குள் இறுக்கி
விழிபிதுங்கி நீ காட்டும்
மவுனங்கள் புரியுமெனக்கு
மவுனப் பயணி
இருக்கை மேல்
கால்கள் பரப்பி
அமர்கிறாய்
இருட்டில் ஊடுருவி
வெளிச்சம் தேடுதுன்
பார்வைகள்
உனக்குப் பின்னாலிருந்த
முகம் மலித்த இளைஞனும்
இறங்கிப் போய் விட்டான்
புத்தகத்தை மடித்து
வைத்துவிட்டு
உன் முகம் பார்த்து
புன்னகைத்தபடியிருக்கும்
என்னைப்பார்த்து
குறைந்தபட்சம்
புன்னகைத்திருக்கலாம் நீ
அடுத்த ரயில்
எப்பொழுது வருமென்று
கவலையோடு கேட்டாய்
இருபது நிமிடங்களில் என
நம்பிக்கையோடு பதிலளித்தேன்
ரயில் வரும் வரை
நீ எதுவும் கேட்கவில்லை
நான் எதுவும் சொல்லவில்லை
நம் மவுனம் கலைக்க
வந்து சேர்ந்தது
மின்ரயில்
தோள் சாய்ந்திருக்கிறாள்
தேவதையாய் ஒருத்தி
ஐந்து ரூபாய்க்கு ஆறு
எனக் கூவுகிறான்
அரைநிஜார் பையன்
கார்டூன் பாத்திரமொன்றை
நினைவூட்டும் ஜாடையில்
பல்தெரிய சிரிக்கிறான்
பைஜாமாக்காரன்
முலைபெருத்தவளோடு
ரகசியம் பகிர்கிறான்
புஜம் பருத்தவன்
துண்டு துண்டாய் ஏப்பம்
விட்டபடி வயிறு
தடவுகிறான் தடியன்
கம்பி தொங்கியபடி நால்வர்
வாசல் நின்றபடி ஐவர்
இறங்க ஆயத்தமாய் அறுவர்
எதையும் கவனியாது
விரித்த புத்தகத்துள்
படுத்துக் கிடக்கிறாய்
என்ன படிப்பாளி நீ?
கிடைத்து விடுகிறது
ஜன்னலோர இருக்கை
கண் கூடுகிறது
வழிநெடுக பசுமைகள்
கொரிக்கக் கிடைக்கிறது
கடலையும் மிட்டாயும்
பருக கிடைக்கிறது
தூயக் குடிநீர்
ஊர் விசாரிக்கிறான்
சாப்பாடுக் காரன்
கதை சொல்லி காசு
வாங்குகிறான் பிச்சைக்காரன்
அத்துமீறி ஏறும் ஆட்கள் கூட
போகுமிடம் கேட்கிறார் சைகையால்
பயணமுடிவிலும் பேசாது
இறங்கிப் போகிறாய் நீ
madhiyalagan@rediffmail.com
- பனிக்கரடி முழுக்கு
- பெண்புத்தி, பின்புத்தி!
- தோழர் பரா நினைவில்
- Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்
- மூக்கு
- துரும்படியில் யானை படுத்திருந்தது
- புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? (கட்டுரை: 11)
- பெண்ணெனும் இரண்டாமினம்
- கத்தி குத்திய இடம்…
- அன்புள்ள கிரிதரன்
- ‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….
- நாங்கள் பூக்களாக இருக்கிறோம்
- 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு
- உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை
- கவிதைகள்
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்
- கடிதம்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- கவிதைகள்
- நண்பன்
- வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!
- ஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்
- “மலர்கொடி”
- திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
- மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி
- 27வது பெண்கள் சந்திப்பு
- கவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது
- மலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை
- இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்
- எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!
- நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்
- காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்
- உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
- ராட்டடூயி
- தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.
- மாத்தா- ஹரி அத்தியாயம் -44
- மூடு மணல்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2
- ஒரு ராஜா ஒரு ராணி
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்
- யார் இவர்கள்?
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!
- நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”
- வேட்டை நாய்
- எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…
- வருவதுதான் வாழ்க்கை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
- கிளைதாவி வரும் மின்னல்
- கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !
- பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்
- “அலமாரி”