கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கருணாகரன்


திசையழிவு

உடைந்து நொருங்கிய

மலர்களிலிருந்து சிதறிய குருதியில்

இருண்ட திவ் வெளி

தவித்தன நிறங்களும்

வாசனையும்

பெயர முடியா திறுகிய

நிலவில்

உறைந்தது இரவு

வெளியிலிருந்தும்

மரங்களிலிருந்தும் விலகிய

பறவை

கனலோடலைந்தது

கூடு தேடி

மரங்களும் வெளியுமற்ற

திசையில்

காலம் உருகி உறைந்தது

ஒரு கிண்ணத்தில்

அதன் சுவையாகத் திரண்டது

பறவையின் கனவும்

கூடும்.


செல்லாத சொற்களோடு

எங்கும் செல்லாத சொற்களோடு

தெருவில் நீ போனபோது

இரவில்

தூங்கமுடியாது நீ தவித்தபோது

உன் தொண்டைக்குழியில்

உயிர் முடிச்சிறுகியபோது

வலையில் நீ சிக்கிய பூச்சி

வலையோ

எல்லாக்கண்ணிகளாலும் தொடுக்கப்பட்ட

உலகம்

உனக்கெனவும் எனக்கெனவும்

ஒவ்வொரு கண்ணியிலும் விரிந்த சிறை

வலையில்

ஒடுங்கியது

உன் கானற் சொற்களின்

கொதிப்போடு

எனதும்தான்

யாரும் கேட்கவில்லை

உனது முறையீட்டை


>b>
பூட்டுகள் பூட்டுகள் பூட்டுகள்

எல்லாப்பூட்டுகளோடும்

இணைந்திருந்த வலைகள்

பிரித்தறியத் தெரிந்திருந்தன

நுட்பமாய்

உனது சொற்களை வேறாகவும்

உன்னை வேறாகவும்

அவை தெரிந்திருந்தன

இன்னும்

உனது சொற்களைத்தவிர்த்து

உன்னை தேர



வழியில் ஒரு நாற்காலி

வழியில் ஒரு நாற்காலி

தனித்திருந்தது

விட்டுச் சென்றோருக்காகவா

வருவோருக்காகவா

மிஞ்சிய அதன் நினைவுகளில்

விடை பெற்றது யார்

இனி

வரும் விருந்தாளி யார்

யாருடைய நிழலும்

அதனிடமில்லை

பல்லாயிரம் வேர்களோடும்

பற்கள் கொம்புகளோடும்

வளர்ந்து மலையலாம் அது

சிலபோது

சிறகோடு

காற்றிலேறி வினோதப் பறவையாய்க் கரையலாம்

எப்படியோ

வழியில் ஒரு நாற்காலி

தனித்திருக்கிறது.


இசை மொழி

பாடுக என்ற இசை மொழியைச்

சொன்ன காற்றிடம்

பாடியது பறவை

தன் அந்தரங்கத்தின்

உள்@றிய சுனையை

மரங்களை வாழ்த்தி

காற்றை வாழ்த்தி

வெளியை வாழ்த்தி

தன் சிறகை வாழ்த்தி

பறவையின் அந்தரங்கச் சுனையை

அறிந்த காற்று

கொண்டு சென்றது

மரத்திடம் வாழ்த்துகளை

வெளியிடம்

நன்றியை

சிறகிடம்

குதூகலத்தை

அந்தத் திருவிழாவில்

ஒரு விருந்தாளியும்

கலந்திருந்தார் தோழமை நிரம்ப

சே (குவேரா)

இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள்.


poompoom2007@gmail.com

Series Navigation

author

கருணாகரன்

கருணாகரன்

Similar Posts