கருணாகரன்
திசையழிவு
உடைந்து நொருங்கிய
மலர்களிலிருந்து சிதறிய குருதியில்
இருண்ட திவ் வெளி
தவித்தன நிறங்களும்
வாசனையும்
பெயர முடியா திறுகிய
நிலவில்
உறைந்தது இரவு
வெளியிலிருந்தும்
மரங்களிலிருந்தும் விலகிய
பறவை
கனலோடலைந்தது
கூடு தேடி
மரங்களும் வெளியுமற்ற
திசையில்
காலம் உருகி உறைந்தது
ஒரு கிண்ணத்தில்
அதன் சுவையாகத் திரண்டது
பறவையின் கனவும்
கூடும்.
செல்லாத சொற்களோடு
எங்கும் செல்லாத சொற்களோடு
தெருவில் நீ போனபோது
இரவில்
தூங்கமுடியாது நீ தவித்தபோது
உன் தொண்டைக்குழியில்
உயிர் முடிச்சிறுகியபோது
வலையில் நீ சிக்கிய பூச்சி
வலையோ
எல்லாக்கண்ணிகளாலும் தொடுக்கப்பட்ட
உலகம்
உனக்கெனவும் எனக்கெனவும்
ஒவ்வொரு கண்ணியிலும் விரிந்த சிறை
வலையில்
ஒடுங்கியது
உன் கானற் சொற்களின்
கொதிப்போடு
எனதும்தான்
யாரும் கேட்கவில்லை
உனது முறையீட்டை
>b>
பூட்டுகள் பூட்டுகள் பூட்டுகள்
எல்லாப்பூட்டுகளோடும்
இணைந்திருந்த வலைகள்
பிரித்தறியத் தெரிந்திருந்தன
நுட்பமாய்
உனது சொற்களை வேறாகவும்
உன்னை வேறாகவும்
அவை தெரிந்திருந்தன
இன்னும்
உனது சொற்களைத்தவிர்த்து
உன்னை தேர
வழியில் ஒரு நாற்காலி
வழியில் ஒரு நாற்காலி
தனித்திருந்தது
விட்டுச் சென்றோருக்காகவா
வருவோருக்காகவா
மிஞ்சிய அதன் நினைவுகளில்
விடை பெற்றது யார்
இனி
வரும் விருந்தாளி யார்
யாருடைய நிழலும்
அதனிடமில்லை
பல்லாயிரம் வேர்களோடும்
பற்கள் கொம்புகளோடும்
வளர்ந்து மலையலாம் அது
சிலபோது
சிறகோடு
காற்றிலேறி வினோதப் பறவையாய்க் கரையலாம்
எப்படியோ
வழியில் ஒரு நாற்காலி
தனித்திருக்கிறது.
இசை மொழி
பாடுக என்ற இசை மொழியைச்
சொன்ன காற்றிடம்
பாடியது பறவை
தன் அந்தரங்கத்தின்
உள்@றிய சுனையை
மரங்களை வாழ்த்தி
காற்றை வாழ்த்தி
வெளியை வாழ்த்தி
தன் சிறகை வாழ்த்தி
பறவையின் அந்தரங்கச் சுனையை
அறிந்த காற்று
கொண்டு சென்றது
மரத்திடம் வாழ்த்துகளை
வெளியிடம்
நன்றியை
சிறகிடம்
குதூகலத்தை
அந்தத் திருவிழாவில்
ஒரு விருந்தாளியும்
கலந்திருந்தார் தோழமை நிரம்ப
சே (குவேரா)
இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள்.
poompoom2007@gmail.com
- பனிக்கரடி முழுக்கு
- பெண்புத்தி, பின்புத்தி!
- தோழர் பரா நினைவில்
- Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்
- மூக்கு
- துரும்படியில் யானை படுத்திருந்தது
- புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? (கட்டுரை: 11)
- பெண்ணெனும் இரண்டாமினம்
- கத்தி குத்திய இடம்…
- அன்புள்ள கிரிதரன்
- ‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….
- நாங்கள் பூக்களாக இருக்கிறோம்
- 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு
- உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை
- கவிதைகள்
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்
- கடிதம்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- கவிதைகள்
- நண்பன்
- வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!
- ஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்
- “மலர்கொடி”
- திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
- மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி
- 27வது பெண்கள் சந்திப்பு
- கவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது
- மலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை
- இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்
- எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!
- நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்
- காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்
- உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
- ராட்டடூயி
- தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.
- மாத்தா- ஹரி அத்தியாயம் -44
- மூடு மணல்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2
- ஒரு ராஜா ஒரு ராணி
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்
- யார் இவர்கள்?
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!
- நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”
- வேட்டை நாய்
- எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…
- வருவதுதான் வாழ்க்கை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
- கிளைதாவி வரும் மின்னல்
- கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !
- பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்
- “அலமாரி”