கருணாகரன்
மியூசியத்தில் வைக்கப்படும் நாள்
இந்தக்களைப்பு நீங்க
தண்ணீரைக்குடி
கைவிடப்பட்ட இந்த நாள்
இனி ஒரு போதுமே கிடைக்கப் போவதில்லை
இன்று
துக்கத்தின் கடைசிப்புள்ளியிலிருந்து
திரும்பி
அவரவர் இடத்துக்குச் செல்வோம்.
மெல்ல மெல்ல
வேதனையின் வலி பின்னகர
இறந்தவனின் உயிர்
நம்மை விட்டு நெடுந்தொலைவு போன திசையில்
போகிறது
அவனின் நினைவுகளும்
கரைந்து
கனமற்று.
மெதுவாகவே
பதுங்கி நகர்ந்து வருகின்றன
துக்கத்தின் போது மிரண்டு பின்தங்கிய
வார்த்தைப் பூனைகள்
நம் கால்களுக்கிடையில்
மீண்டும்.
கழிந்து போன பருவகாலமாகிவிட்ட
அவன்
இனி ஒளி மங்கியதொரு புகைப்படமே
வெட்கமாகவேயிருக்கிறது
இந்த நாடகத்தில்
நாமே
நடிப்பதாகவும் நாமே
அதைப்பார்ப்பதாகவும் இருப்பதையிட்டு
தற்செயலாய்
இறந்தவனைக் காணநேர்ந்தால்
உலர்ந்த நினைவுகளை வைத்துக்கொண்டு
என்ன செய்வது
எந்தப்புள்ளியிலிருந்து அவனைத்
தொடர்வது
என்பதும் ஒரு பிரச்சினையே
எல்லாமே மியூசித்திற்குத்தான்
ஒரு போது, எனலாமா
தொண்டன்
இந்தக்கதவுக்கு வெளியே
நிறுத்தப்பட்டிருக்கிறது நெடுநேரமாய்
வரவேற்பு
யாரடையதோ வருகைக்காக
பூட்டப்பட்ட கதவின் வெளியே
நெடுநேரமாய் தனித்திருக்கும் போது
அவமானத்தையும்
நெருடலையும்
சகித்துக் கொள்ள முடியாது
வெளியேறவும்
உள்நுளையவும்
வழியற்று
சலிப்போடு காத்திருக்கிறது
வரவேற்பு
இன்னும் யாருக்காகவோ
அவசரமா
மகிழ்ச்சியா
துக்கமா
தனிமையா எது வருமெனத்
தெரியாமலே காத்திருக்கும்
அசைகின்ற நீள் பொழுது
எந்த முகமும்
இல்லை அதனிடம்
எனினும்
இன்னும் காத்துக் கொண்டேயிருக்கிறது
அது
பூட்டப்பட்ட கதவை விட்டுப் போக முடியாமல்
poompoom2007@gmail.com
- பனிக்கரடி முழுக்கு
- பெண்புத்தி, பின்புத்தி!
- தோழர் பரா நினைவில்
- Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்
- மூக்கு
- துரும்படியில் யானை படுத்திருந்தது
- புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? (கட்டுரை: 11)
- பெண்ணெனும் இரண்டாமினம்
- கத்தி குத்திய இடம்…
- அன்புள்ள கிரிதரன்
- ‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….
- நாங்கள் பூக்களாக இருக்கிறோம்
- 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு
- உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை
- கவிதைகள்
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்
- கடிதம்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- கவிதைகள்
- நண்பன்
- வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!
- ஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்
- “மலர்கொடி”
- திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
- மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி
- 27வது பெண்கள் சந்திப்பு
- கவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது
- மலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை
- இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்
- எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!
- நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்
- காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்
- உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
- ராட்டடூயி
- தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.
- மாத்தா- ஹரி அத்தியாயம் -44
- மூடு மணல்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2
- ஒரு ராஜா ஒரு ராணி
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்
- யார் இவர்கள்?
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!
- நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”
- வேட்டை நாய்
- எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…
- வருவதுதான் வாழ்க்கை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
- கிளைதாவி வரும் மின்னல்
- கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !
- பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்
- “அலமாரி”