தீபச்செல்வன்
01.
எனது கனவுகள் ஏன்
பயங்கரமானவையாக
இருக்கின்றன?
முதலில் இரவு
பயங்கரமாக வருகிறது
மிக தாமதமாகவே
தூக்கம் வருகிறது
முழு தூக்கத்தையும்
பயங்கர கனவுகள்
விழுங்கி விடுகின்றன.
02
ஆற்றங்கரை குடிசைகளை
வெள்ளம்
அள்ளிப்போகிறது
எனது அம்மாவையும்
தங்கையையும்
எங்கள்
சமையல் பாத்திரங்களையும்
வெள்ளம்
வழித்தெடுத்துக்கொண்டிருக்கிறது.
03
நான் ஒரு மாட்டு வண்டியில்
எனது நகரத்திற்கு
போய்க்கொண்டிருக்கிறேன்
வழிநிறைய கிடந்த
சோதனைசாவடி ஒன்றின்
சுவர்களில் மோதி
நான் பயணித்த வண்டி
சிதைகிறது
இழுத்து வந்த எருதுகள்
செத்து கிடக்கின்றன
வேறு இரண்டு எருதுகள்
தமது கொம்புகளால்
என் வயிற்றை கிழிக்கின்றன.
04
ஆறுகள் சிதைந்து கிடக்க
மரங்கள்
அழிக்கப்பட்டிருக்க
எனதூரில்
எல்லோரும் கூடியிருக்கிறார்கள்
சவப்பெட்டிகளும்
பாடைகளும்
நிறைந்து கிடக்கின்றன
வானத்தை இருள்
சூழ்ந்திருக்க
அவர்கள் கட்டி
அழுதபடியிருக்கிறார்கள்.
05
எனது கால்கள் உடைந்து கிடக்க
பாழடைந்து வரும்
நகரத்தில் உறைந்து விடுகிறேன்
வெளுறிய வீதியில்
செல்ல முற்பட்ட
என் மாட்டு வண்டி
சாம்பலாய் கிடக்கிறது.
06
பகல்களில் தப்பியிருந்தேன்
மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர இரவு வருகிறது
மெல்ல மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர தூக்கமும் வருகிறது.
மிக வேகமாவே
அச்சமூட்டியபடி
பயங்கர கனவுகள் வந்து
தீவிரமாகின்றன
நான் திடுக்கிடுகிறேன்.
எனது கனவுகள்
ஏன் பயங்கரமானவையாகவே
தொடர்கின்றன.. ?
deebachelvan@gmail.com
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2
- பெருஞ்சித்திரனாரின் பள்ளிப்பறவைகள்
- அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி
- விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)
- மூழ்கும் காதல்
- மனித வேட்டை
- வளரும் வலிகள்
- சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்
- காதலர் தின’த்தில் ஒரு பேட்டி!
- மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு
- கடிதம்
- கடிதம்
- Exploitation of Migrant Workers in the United Arab Emirates
- Tamil programmes during the Writers Festival
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1
- பூக்கள்
- கனவில் நிகழுகிற பயங்கர உலகம்
- தைவான் நாடோடிக் கதைகள் (2)
- மாத்தா ஹரி அத்தியாயம் -38
- அத்தையம்மா!
- டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்
- நூலகம் எனும் அன்னை
- “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை
- சூரன் போர்
- படித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 3
- ஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்
- மும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)
- அக்கினிப் பூக்கள் – 2
- தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !
- பாத்திரத்தில் இல்லை
- தாழ் படுக்கைகள்
- பன்னாட்டுக் கருத்தரங்கம்