மழை காதலன்
ஏமாற்றங்கள்
தனிமையும் இறுக்கமும்
சொல்ல முடியா வார்த்தைகளுமாய்
இந்த மதியம் போகிறது
எனக்கு தெரியும்
உனக்கும் தெரியும் என..
இருந்தும் கேட்பதில்லை
கேட்காமல் இருக்கும் வலிமையும்
எனக்கு வாய்ப்பதில்லை..
உன் இறுதி ஆயுதமாய்
சந்தேகம் உனக்கு என்பாய்
செயலற்றவனாய் நிற்பேன்
வேறு வழி இன்றி…
எதிர்பார்புகள் இருக்கும் வரை
ஏமாற்றங்கள் உறுதி என்பதை
நீயும் உணர்த்தி இருக்கிறாய் வேறென்ன?
எல்லாம் முடிந்து
இரவில் மார்பில் தலைசாய்த்து
“சாரிடா”என்பாய் குழந்தையாய்
வெளிப்படும் இரு சொட்டு கண்ணீரோடு
காணாமல் போகும் என் கோபமும்…
கறுப்பு மையும், தனிமையும்
நான் கவிதை எழுதும் போது
தீர்ந்து போகும் பேனாவின்
மையை போலவே
அதிவிரைவில் முடிந்து போகிறது
என் காதலின் கனவுகளும்…
பென்சிலின் கறுமையான
எழுத்துகளில் வெளிப்படுகிறது
என் தனிமையின் புலம்பல்
என்றபோதிலும்
அவ்வளவு சீக்கிரம்
தீர்ந்து போவதில்லை
பென்சிலின் கறுப்பு மையும்
என் தனிமை குரலும்….
எனக்கும் ஆசைகள் உண்டு
மெளனமாய் வெளிப்படுகிறது
என் விசும்பல் சத்தம்…
உனக்கும் சுதந்திரம் உண்டு
ஆம் பெண்ணே…
உனக்கும் சுதந்திரம் உண்டு…
உனக்காக நான் வெட்டிய விரல் நகங்கள்
உனக்காக நான் மாற்றி கொண்ட என் புகை பழக்கம்
உனக்காக நான் மறந்து போன என் கல்லூரி தோழிகள்
என் சிறு வயது நட்புகள்
என் காகித கிறுக்கல்கள்
என எல்லாமே…
ஆனாலும் என் வெற்றிகளுக்கு
ஆசைப்படும் நீ
என் தோல்விகளை மட்டும் மறுக்கிறாயே…
என் புன்னகைகளை அலங்கரிக்கும் நீ
என் கண்ணீர்துளிகளுக்கும் காரணமாய்…
இருவருமாய் இது வரை திரைப்படம்
சென்றதில்லை உனக்கு பிடிக்காது
பூங்கா ரசித்ததில்லை
உனக்கு பிடிக்காது
உணவகங்கள் செல்வதில்லை
உனக்கு கூச்சம்
அனைவருக்கும் உடைகள்
தேர்வில் மட்டுமே
பயணங்கள் உன் விருப்பத்தில்
பண்டிகைகள் உன் விருப்பத்தில்
உறவுகள் உன் விருப்பத்தில்….
எனக்கும் ஆசைகள் உண்டு
எப்பொழுது புரியும் உனக்கு….
-மழை காதலன்
sampathpovi@gmail.com
- Toronto International Film Festival 2007
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)
- I, BOSE presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதம்
- மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா ?
- மை கவிதைத் தொகுப்பு
- தாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் !
- நேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால் இந்தியாவிற் தொடர்ந்து, நடத்தப்படும் பத்தாவது பெண்கள் சிறு கதைப்போட்டி
- மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம்(23.10.1908-31.08.1989)
- 26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 1
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர் விந்தைகள் பிரபஞ்சத்தின் வயதென்ன ? (கட்டுரை: 1)
- “மாறிப் போன தடங்கள்”
- பூ ஒன்று (இரண்டு) புயலானது
- 1/4 என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 30 (நாவல் – நிறைவுப் பகுதி)
- படித்ததும் புரிந்ததும் – (8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் பூக்கள் – இலக்கணக் குறிப்பு
- தண்ணீர்
- லா.ச.ரா என்கிற கைவினைஞர்
- லா.ச.ரா. குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் – முதல்வர் தகவல்
- தமிழ்படித்தோரைக் காப்போம்
- தமிழ்வாணன் – மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்
- “ததிங்கிணதோம்”
- கதைகளுக்குள் நர்த்தனமாடும் கதைகளும் கதையாசிரியர்களும்
- குள்ளநரி
- தண்ணீரைப் போன்றது வெளிச்சம்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 34
- கடிதம் – தவிர்க்க முடியாத இருளின் குறிப்புகள்
- பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் ‘பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?’ கட்டுரை
- மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- ஏன் இந்தத் தலைக்குனிவு
- வழக்கம் போல் இருப்பதில்லைதான் வழக்கமான மழை
- லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி
- புத்தனுக்கு போதி மரம்………..
- ஊர்விலக்கு கண்டனத்திற்குரியது
- அந்த நாள் ஞாபகம் : அதோ அந்தப் பறவை போல….
- திரைப்படம் : ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்