சி. ஜெயபாரதன், கனடா
இல்லத்தில் அம்மா ராணிதான் !
ஆயினும்
எல்லோருக்கும் அவள் அடிமை !
வீட்டில்
அத்தனை பேரும் ராஜா !
நித்தமும்
பின்தூங்கி முன்னெழுவாள்
அன்னை !
பித்துப் பிடிக்காத
பேதை !
எந்தப் பிள்ளைக்கும் அவள்
சொந்தத் தாய் !
பால் கொடுப்பாள்
பாப்பாவுக்கு !
முதுகு தேய்ப்பாள்
அப்பாவுக்கு !
இனிதாய் உணவு சமைப்பாள் !
என் வாயில் ஊட்டுவாள் !
வேலையில் மூழ்கி
வேர்வையில் குளிப்பாள் !
எப்போதாவது அடி வாங்குவாள்
அப்பாவிடம் !
தப்பாது மிதி வாங்குவாள்
தமயனிடம் !
கையை முறிப்பான்
கடைசித் தம்பி !
கலங்கும்
கண்ணீரைத் துடைப்பது
கனலும் காற்றும் !
பளுவைக் குறைப்பது அவளது
நோயும் நொடியும் !
ஆயுளை நீடிக்க வைப்பது
தாயுள்ளம் !
உயிருள்ள போது ஒருவராலும்
வணங்கப் படாது,
செத்த பிறகு
தெய்வ மாகிறாள் !
*********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan October 16, 2007]
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)
- சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது
- இஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்
- காதல் நாற்பது (43) எப்படி நேசிப்பது உன்னை ?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7
- சாருவின் ஜனனி:
- கோரேகான் தமிழ்ச் சங்கம் – எஸ் ஷங்கரநாராயணனுடன் ஒரு சந்திப்பு
- பொது ஒழுக்கம்
- இறந்தது யார்?
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 32
- கால நதிக்கரையில்……(நாவல்)- 28
- சும்மா
- எழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா
- Tamilnadu Thiraippada Iyakkam And National Folklore Support Centre
- பன்னாட்டுக் கருத்தரங்கு – தமிழின் ஓருலகக் கருத்துணர்வு
- காந்தி மக்கின்ரையர் வழங்கும் இரு நாடகங்கள்
- நிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின்
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் பட்டி மன்றம்
- நாக்குநூல்
- தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு
- வாசம்
- “ நிற்பவர்கள்”
- வஞ்சியென்றால் என்னை…
- வெள்ளைக்காதல்
- எங்கள் தாய் !
- திருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்
- கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா
- கரிசல் கிருட்டிணசாமி (17.12.1959)
- புலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்
- படித்ததும் புரிந்ததும்..(6) மிருகம்- கன்னத்தில் அறைந்தால் – கூட்டணி தர்மம்
- குற்றாலம் பதிவுகள்
- சிறுகதையில் என்ன நடக்கிறது?
- வானப்பிரஸ்தம்