கவிதை

author
0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

தௌ·பீக்


புன்னகைப்பது
உனக்கு அன்றாட நிகழ்வுதான்…
எனக்கோ அற்புதம்,
அதன் தாக்கத்திலிருந்து மீண்டு வருவது.

உலகின் பொருட்கள் யாவும்
வழக்கமான அர்த்தங்களுடந்தான் இருந்தன…
உன் காதல் பார்வை என் மேல் விழும் வரை.

என் கண்கள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாலும்..
என பார்வை உன் மீதே இருந்தது.

காதலின் அடுத்த பாடல் என்னவென்பது
யூகிக்க முடியாதது…
இதயத்தை வெளிப்படுத்தும் உனது பார்வை..
நிச்சயம் அன்பானதுதான்.

கடவுள் எனக்கு
எல்லையில்லா கணங்கள் தரட்டும்…
உன்னை விட்டு என் பார்வையை நீக்கவும்,
உன் அன்பை பாடலாய் எழுதவும்.

மேலும் ஒரு உறுதி கொடுக்கட்டும் கடவுள்
மீண்டும் ஒரு உன்னை படைப்பதில்லை என்று.
அப்படிப் படைத்தால், என்னையும் படைப்பது என்று….

மனதை ஈர்க்கும் சங்கீதங்கள்
எவ்வளவோ இருக்கலாம்…
உன் ஒவ்வொரு பார்வையையும், புன்னகையையும் போல.

எழுதியே க வேண்டும்
ஒவ்வொரு வா¢க் கவியும்….உன்னைபபற்றி
இந்த போதையை தீர்த்தால்தானே
அடுத்த போதைக்கு தயாராக முடியும்…?

உலகின் உயிர்ப்பொருட்கள் எல்லாமே வெவ்வேறுதான்…
னால் உயிர் என்னவோ ஒன்றுதான்.
உன் வழியே பார்க்கயில்…
ஒவ்வொரு துகளும், ஒவ்வொரு துளியும் நீதான்.

இறுதியில் இறைவனின் பு¡¢தலை நோக்கி
சென்றுதான் க வேண்டும் நாம்……
னாலும்,
நீ என் கையைப் பற்றி அழைத்துச் செல்வது நலம்…

விளக்கொளியில் நீ ஒளிர்வதாகச்
சொல்கிறார்கள் எல்லோரும்
விளக்கு எங்கிருந்து ஒளியைப் பெற்றிருக்க முடியும்?
நல்ல பதில் சொல்லேன்.

ஒரு நாளில் நீயும் நானும் இல்லாமல் போகலாம்…
இந்த பூமியில்….
உன் மீதான என் பாடலும், நம் காதலும் இருக்கும்…
இன்னொருவன், இன்னொரு பெண் மூலமாக


khadhar@gmail.com

Series Navigation

Similar Posts