தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நாமறிந்த உலகெங்கணும் காதலிக்கிறார் !
உறுதியான காதலைப்
புறக்கணிப்ப தில்லை நான் !
இளவயதிலேயே
காதலைத் தெரிந்து கொண்டேன்
அப்போதிருந்தே
பூக்களைச் சேமித்தேன்,
சமீபக் காலம் வரை !
இன்னும் பூமணத்தை நுகர்கிறேன் !
புன்னகைக்குக் கூட
கைக்குட்டையை
வீசி எறிகிறார் வழிப்போக்கர் !
அழுதாலும் எனக்குப் பரிதாபப்பட
ஒருவருமில்லை !
ஒற்றைக்கண்
கிரேக்க அரக்கனின் வெண்பல் கூட
நழுவிச் செல்லும்
அடிக்கடிப் பெய்யும்
மழையில்
மழுங்கிய கொட்டையை
விழுங்கும் போது !
எதுவும் மறக்கச் செய்யாது,
ஒதுக்கித் தள்ளாது
காதல் என்பதை !
என்னினிய அன்பனே !
அத்தகைய காதல னில்லை நீ !
நோயில் நோகும் எனக்குக்
காத்திருந்து
ஆத்மாக்கள் தழுவிக் கொள்ளச்
சிந்திப்பாய் சீக்கிரம்,
மற்றவர்
காலம் கடந்த விட்டதென்று
ஓலமிடும் போது !
************
Poem -40
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
Oh, yes! they love through all this world of ours!
I will not gainsay love, called love forsooth.
I have heard love talked in my early youth,
And since, not so long back but that the flowers
Then gathered, smell still. Mussulmans and Giaours
Throw kerchiefs at a smile, and have no ruth
For any weeping. Polypheme’s white tooth
Slips on the nut if, after frequent showers,
The shell is over-smooth,–and not so much
Will turn the thing called love, aside to hate
Or else to oblivion. But thou art not such
A lover, my Belovழூd! thou canst wait
Through sorrow and sickness, to bring souls to touch,
And think it soon when others cry “Too late.”
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 24, 2007)]
- கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி நிலையம் – 4
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 8
- கிடப்பில் போட வேண்டிய சூது சமுத்திரத் திட்டம்
- சிந்தனையில் மாற்றம் வேண்டும்
- வன்முறையே வழிகாட்டி நெறியா?
- காட்டில் விழுந்த மரம்
- பங்க்ச்சுவாலிட்டி
- “படித்ததும் புரிந்ததும்”.. (3) தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்
- மேலும் சில விடை தெரியாத கேள்விகள்
- பி எஸ் நரேந்திரன் கட்டுரையைப் படித்தபோது – மூக்கணாங்கயிறு கட்டிய டிராகன்தான் அமெரிக்கா
- ‘நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள்
- எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் – 60
- அலேர்ஜியும் ஆஸ்மாவும்
- பாரதி காலப் பெண்ணியம்
- பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914- 09. 06.1981)
- மாற்றுத்திரை குறும்படம்,ஆவணப்படம் திரையிடல்…
- கடிதம்
- கடிதம் (ராமர் சேதுவும் கண்ணகி சிலையும்)
- சொன்னாலும் சொல்லுவார்கள்- மலர் மன்னன் கட்டுரை
- ஜெயமோகனின் ஏழாம் உலகம்
- காதல் நாற்பது – 40 எனக்காகக் காத்திருந்தாய் !
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 25
- மாத்தா ஹரி – அத்தியாயம் 29
- நீயாவது அப்படிச் சொல்லாதே
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 4
- ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் – எழுத்தும் எதிர்வினையும் — ஒரு பார்வை
- கவிஞர் ரசூலின் கட்டுரையும் சர்ச்சையும்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம்
- மோடியின் மோடிவித்தைக்கும் அத்வானியின் அரசியல் நடவடிக்கைக்கும் தற்போது ராமர் அவசியம் தேவை!
- ஹேராம்.. என் கவிதைகள் சாகவேண்டும்
- சுயநலம் !
- இரவு நட்சத்திரங்கள்
- சிலைப்பதிவு
- மாலை பொழுதுகள்
- செல்வி காருண்யா கருணாகரமூர்த்தி நடன அரங்கேற்றம்