வீடு

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

வைகைச் செல்வி



மூலை முடுக்கெல்லாம்
சிலந்தி வலை பின்ன
காலை விரித்தபடி
நண்டோடும் வலைக்குள்.

மண்ணுக்குள் புழுக்கள்
மரப் பொந்தில் ஆந்தை.
விண்ணில் சிறகடிக்கும்
பறவைக்குச் சிறுகூடு.

காட்டுக்குள் உப்புக்
கடலுக்குள் பல்லுயிர்கள்.
நாட்டு நாய் வாழும்
நிம்மதியாய்த் தெருவில்.

ஓதுவார் யாருமின்றி
ஒற்றுமை தேன்கூட்டில்.
யாதும் ஊர்தானே
பூச்சிக்கும் எறும்புக்கும்?

செங்கல்லும் சுண்ணாம்பும்
சின்னஞ்சிறு குடிசைகளும்
மங்காத சலவைக்கல்
மாளிகையும் நிலைத்திருக்க. . . .

சாதி மதச் சுவர்களுக்குள்
மூச்சு முட்டி வெப்பத்தால்
சோதியாக எரியுதம்மா
பாழும் மனிதக் கட்டைகள்!


vaigai_anne@yahoo.com

Series Navigation

author

வைகைச் செல்வி

வைகைச் செல்வி

Similar Posts