யெஸ்.பாலபாரதி
ங்கொய்யால…
கூட்டம் போடு
பழந்தமிழ்
இலக்கியங்களில்
புளங்காகிதமடை
கூட்டத்தில் கலகம் செய்
குழுசேர்ந்து
குசுகுசுத்துக்கொள்
புலியை விரட்டிய
மறத்தியின்
பால் குடித்தவனென
மார் தட்டிக்கொள்
யதார்த்தம்
மாயா- யதார்த்தம்
நவீனம்
பின்-நவீனம்
அரசியல் பேசு
அலோவென
கை குலுக்கிக்கொள்
எழுது
பிரதி அழி
நாவறளப்பேசு
கொன்றுகுவி
அடையாளம்
தொலைத்ததறியாமல்
கூச்சலிடு
தமிழனென்று
குப்பிகளுடைய
கோப்பையை காலி செய்
மசுரு
சோற்றுக்கு
வழியில்லாமல்
சாகிறான் விவசாயி.
சிரங்குகள்
உடலெங்கும் சிரங்குகள்
அவ்வப்போது
சொறிந்து கொள்ளத்தோன்றும் விதத்தில்
ஒழுங்காய்த்தான் இருந்தன முதலில்
ஆரோக்கியம் சேர்க்குமென
ஆசைப்பட்டு பூசிக்கொண்ட களிம்புகளால்
விளைந்தவை இவை
களிம்புகளை வழங்கியவர்களும்
சொறிந்துகொண்டுதானிருக்கிறார்கள்
இருந்தும் மோகம்
குறையவில்லை மக்களுக்கு
முதலில் அதன்
விளைவைப் பற்றி விளக்க வேண்டும்
பின்னரதனை அழிக்கவேண்டும்
அப்போது தான்
சரிபடும் தேகமும், தேசமும்!
இருப்பு
மடக்கிய குடையுடன்
பேசியபடியடைந்தோம்
மரத்தடியை
மழை
இப்போது தூறலாய்.
யெஸ்.பாலபாரதி
kuilbala@gmail.com
- முகம் கழுவாத அழகி
- வெளியில் மழை பெய்கின்றது! – காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
- சீதையின் தனிப்புலம்பல்
- அரங்காடல் – 14 (2007)
- இரண்டு முத்தங்கள்
- தமிழ்ப் பேசும் ஆங்கில படம்.
- திசைகள் அ வெற்றிவேல் அவர்களின் கட்டுரை
- ம.இலெ.தங்கப்பாவுக்கு ‘சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது’ ‘
- பாண்டித்துரை கட்டுரை
- எழுத்தாளர் சா.கந்தசாமியுடன் ஒரு கலந்துரையாடல்
- ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம்களுக்கு 100% ஒதுக்கீடு…!!!
- சூட்டு யுகப் பிரளயம் ! உலக மாந்தர் கூடி என்ன செய்யலாம் ? – 5
- கவிதைகள்
- காந்தாரி
- கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 15
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 10 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பத்தொன்பது: கோஷின் காதல்!
- ரஜாய்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 19
- பெண் சுரண்டலின் உச்சகட்டம் சுமங்கலி!
- இருளும். . . .வெளிச்சமும். . .
- யாழ் நகரம்
- காதல் நாற்பது – 30 அவ்வொளி மீண்டும் வருமா ?
- ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா