பட்டறிவு

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

ஆதிராஜ்



பிள்ளையார் சுழி போட்டுப்
பேரேடு தொடங்கினேன்.
கள்ள மார்க்கட்டுக்
கணக்கெழுதும் நோட்டு அது!
கொள்ளை கொள்ளையாய்
குவிந்தது லாபம்!
கொஞ்ச நாளில்
கள்ளக் கணக்கால்
காலாண்டுக் கடுங்காவல்!
உள்ளே இருந்தபின்
உறுதியுடன் வெளிவந்தேன்!
கொள்ளை லாபம்
குவிகின்ற நேரமிது!
கள்ளக் கணக்கைக்
கைவிடவா? ஞாபகமாய்ப்
பிள்ளையார் சுழியைப்
பேரேட்டில் போடவில்லை!

– ஆதிராஜ்.

Series Navigation

author

ஆதிராஜ்

ஆதிராஜ்

Similar Posts