உஷாதீபன்
பிணக்கு
உனக்கும் எனக்குமான
உறவுச்சிக்கல்களுக்கிடையில்
தார்மீக முனைப்புகளாய்
பின்னிக் கிடக்கின்றன
ஏராளமான வார்த்தைகள்
வறண்டுபோன நம் வாழ்க்கைக்கு
சாட்சிகளாய் நிற்கின்றன
அதன் வீர்யம்
நீயும் நானும்
கூடிக்களித்தபோது
கும்மாளமிட்ட மெப்பனைகள்
காணாமல்போயின மாயமாய்
இந்தச்சொல்லடுக்குகளின் ஆழத்தில் இனி
நினைத்தாலும் அவிழ்க்க முடியாத
சிடுக்குகளை
ஒரு மூன்றாமவன் வந்து
முயன்று நிற்கலாமா?
எல்லாம் பொய்யென்று
இழித்துணர்ந்த வேளையில்
இந்த இடைப்பட்டவன் எதற்கு இங்கே?
விட்டில்
அகண்ட ககன வெளித் தனிமையில்
உன் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது மனம்
காற்றில் அலைபாயும் இருண்மை விலகி
ஒளி பீறிடத் துடித்து நிற்கிறது எண்ணங்கள்
ஏக்கப் பெருமூச்சுக்கள் அனலாய்ப் பரவி
உனக்கான நேரத்தை நீட்டிக்கின்றன
விழித்திரையிலிருந்து பரவும் கதிர்கள்
விட்டில் பூச்சிகளாய் மினுமினுத்துப்
பறந்தழிகின்றன
கனல் துண்டமாய்ச் சிதறும்
கண் ஓர நீர்த்துளி
நம்மின்
கதையைச்சொல்லி மடிகிறது
பயணம்
தவறாமல் வருகிறான் ஒருவன்
ஞாயிறன்று அவன்
நம்பிக்கை தளராத
நயமான ஓசை
நீள் தெருவில்
நெடுக மோதி எதிரொலித்து
அதிர்ந்து அலைந்து
மாயமாய் மறைந்து
அழிந்து போகிறது
எல்லோர்க்கும் வாழ்க்கை
ஏதோவோர் நம்பிக்கையின்பாற்பட்டு
தவறாமல் வருகிறான் ஒருவன்
ஞாயிறன்று அவன்
செருப்பூ பழைய செருப்பூ
காலணி ஓசை கானலாய்க் கரைய
குரல் தழுவிய என் பூஞ்சை மனசு
கலங்கிப் போகிறது
இன்னும் அவன்
போகவேண்டிய தொலைவு
எவ்வளவோ?
எப்பொழுது முடியுமோ அவனின்
இன்றையபொழுது
ushadeepan@rediffmail.com
- ‘நிலவு ததும்பும் நீரோடை’ கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்!
- கவிதைத் தொகுதிகள் வெளியீடு
- எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்? – 2
- கருத்துக் கணிப்பு – சில ஆலோசனைகள்
- மனிதன்
- இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் -5
- இலை போட்டாச்சு ! 28 – வெங்காய ரவா தோசை
- காதல் ஒரு போர் போன்றது
- குறுந்தொகை காட்சியும் மாட்சியும்
- இலக்குகள் நோக்கிய பயணத்தில் பாரதி இளைஞர்அணி
- திரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி
- திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு
- இலர் பலராகிய காரணம்
- உரையாடல் குறித்த உராய்தல்கள் – தாஜுக்கு மறுமொழி
- கவிதைகள்
- நிறச் சுவாசங்கள்
- கால நதிக்கரையில்……(நாவல்)-6
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 9
- பிரதிமைகள்
- நாவல்: அமெரிக்கா II! அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்!
- தலித் முஸ்லிம்
- வழிவிடட்டும் அரசியல் வாரிசுகள்
- தமிழ்நாட்டு அரசின் பொறுப்பற்றதனம்
- தமிழர் நீதி
- பூத்துக் குலுங்கும் பாப்பா! ( சிறுவர் பாடல்)
- காதல் நாற்பது (20) உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு
- கவிதை
- மிருகம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:1)