மு.பழநிக்குமார்
இரவு எட்டைத் தாண்டிய
பரபரப்பில்
கால்கள் முளைத்த அவசரமாய்
அதுவும் கொலுசுகள் அணிந்த அவசரமாய்
அலுவலகம் விட்டு விரைவாய்
படிகளில் இறங்கி சாலை கடந்து
சந்து திரும்பி பேருந்து நிலையம் அடைவாய்
பூப்போன்ற உன்னை
தினமும் சுமந்து போகும்
அந்த பச்சை மினி பூக்கூடைக்குள்
புழுங்கிய ரோஜாவாய் ஏறி அமர்வாய்
ஜன்னலுக்கு வெளியே உன் அழகும்
ஜன்னலுக்கு உள்ளே உன் சோர்வும்
வழிகின்ற காட்சி காணாமல்
உனக்கான நிறுத்தத்திற்கு
மணிபார்த்துக்கொண்டே வருவாய்
விளிம்பில் சரியாய்க் கழுவினோமா;
மதிய வேளைச் சாப்பாட்டுப் பாத்திரம்
நினைவுகளில் பிசுபிசுக்கையில்
பூக்கூடை குலுங்கி நிற்கும்
உனக்கான நிறுத்தம்
படிகளின் இடைஞ்சலில் இறங்கி
மின்விளக்குகள் அணைந்த வீதியில்
விரைந்து நடப்பாய்
உனக்கு முன்பே
அவசரமான அவசரத்தில் கிளம்பி
உனது தெருமுனையில் வந்து
தேநீர் பருகிக்கொண்டிருக்கும்
எனது அநாகரிகத்தை அலட்சியப் படுத்தியவாறே…
மு.பழநிக்குமார்.
pazhanitta@gmail.com
- ‘நிலவு ததும்பும் நீரோடை’ கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்!
- கவிதைத் தொகுதிகள் வெளியீடு
- எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்? – 2
- கருத்துக் கணிப்பு – சில ஆலோசனைகள்
- மனிதன்
- இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் -5
- இலை போட்டாச்சு ! 28 – வெங்காய ரவா தோசை
- காதல் ஒரு போர் போன்றது
- குறுந்தொகை காட்சியும் மாட்சியும்
- இலக்குகள் நோக்கிய பயணத்தில் பாரதி இளைஞர்அணி
- திரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி
- திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு
- இலர் பலராகிய காரணம்
- உரையாடல் குறித்த உராய்தல்கள் – தாஜுக்கு மறுமொழி
- கவிதைகள்
- நிறச் சுவாசங்கள்
- கால நதிக்கரையில்……(நாவல்)-6
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 9
- பிரதிமைகள்
- நாவல்: அமெரிக்கா II! அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்!
- தலித் முஸ்லிம்
- வழிவிடட்டும் அரசியல் வாரிசுகள்
- தமிழ்நாட்டு அரசின் பொறுப்பற்றதனம்
- தமிழர் நீதி
- பூத்துக் குலுங்கும் பாப்பா! ( சிறுவர் பாடல்)
- காதல் நாற்பது (20) உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு
- கவிதை
- மிருகம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:1)