கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

சரவணபவன்


ஜுவனுள்ள சாவு

எட்டுக்கு எட்டு அறைக்குள்
எந்திரமாய் சுழன்று
பொங்கி புழ(ழு)ங்கி
வளர்வதாய் தளர்ந்து
கனவுகளாலே
வாழ்க்கை நடத்தி
அழுக்காக்கவே குளித்து நிரம்பிட துடிக்கும்
துளை குடம் உடைய
நிர்வாணம் தேடும் நிரந்தரமாய்
அடைபட்ட கூண்டிலிருந்து
யதார்த்தத்தை நோக்கி
எட்டி வைத்த முதலடியாய்
இறந்து கிடக்கின்றேன்…



சாமக்கூத்து

சரவணபவன்

சாப கழிவுகளின்
சரணாகதி பிம்பமென
உழைத்து களைத்து
ஊழி ஆறாய் திரும்புகையில்
மோக திணவெடுத்து
முள்ளாக கிழிக்கின்ற
சோக சுமையிவனை
உதறி எழ திராணியின்றி
புதைத்து கொள்(ல்)கிறேன்
உள்ளுக்குள்ளே ஊறும்
வன்மம் போல…



கொல தெய்வத்திற்கு.?

அது பாவம் பரமசாது யாரோடும்
வம்பு சண்டைக்கு போகாது ரத்தமோ
வன்முறையோ
கேள்விபடாத வார்த்தைகள்
எப்பொழுதாவது முட்டிக்கொள்ளும்
யார் எங்கே அழைத்தாலும்
முரண்டு பண்ணாமல் போய்வரும்
இன்னைக்கும்,
எல்லோரும் கிளம்பியதும்
ஆசையாய் அதுவும்
கூடவே வருகிறது
தான் போவது கோவிலுக்கென்றோ
சாமி இருக்கிறதென்றோ
எதையும் அறியாத
பலி கடாவாய்.?


superhitsaravanabavan@yahoo.co.in

Series Navigation

author

சரவணபவன்

சரவணபவன்

Similar Posts