சரவணபவன்
ஜுவனுள்ள சாவு
எட்டுக்கு எட்டு அறைக்குள்
எந்திரமாய் சுழன்று
பொங்கி புழ(ழு)ங்கி
வளர்வதாய் தளர்ந்து
கனவுகளாலே
வாழ்க்கை நடத்தி
அழுக்காக்கவே குளித்து நிரம்பிட துடிக்கும்
துளை குடம் உடைய
நிர்வாணம் தேடும் நிரந்தரமாய்
அடைபட்ட கூண்டிலிருந்து
யதார்த்தத்தை நோக்கி
எட்டி வைத்த முதலடியாய்
இறந்து கிடக்கின்றேன்…
சாமக்கூத்து
சரவணபவன்
சாப கழிவுகளின்
சரணாகதி பிம்பமென
உழைத்து களைத்து
ஊழி ஆறாய் திரும்புகையில்
மோக திணவெடுத்து
முள்ளாக கிழிக்கின்ற
சோக சுமையிவனை
உதறி எழ திராணியின்றி
புதைத்து கொள்(ல்)கிறேன்
உள்ளுக்குள்ளே ஊறும்
வன்மம் போல…
கொல தெய்வத்திற்கு.?
அது பாவம் பரமசாது யாரோடும்
வம்பு சண்டைக்கு போகாது ரத்தமோ
வன்முறையோ
கேள்விபடாத வார்த்தைகள்
எப்பொழுதாவது முட்டிக்கொள்ளும்
யார் எங்கே அழைத்தாலும்
முரண்டு பண்ணாமல் போய்வரும்
இன்னைக்கும்,
எல்லோரும் கிளம்பியதும்
ஆசையாய் அதுவும்
கூடவே வருகிறது
தான் போவது கோவிலுக்கென்றோ
சாமி இருக்கிறதென்றோ
எதையும் அறியாத
பலி கடாவாய்.?
superhitsaravanabavan@yahoo.co.in
- கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!
- சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’
- முஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)
- சான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்
- விளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- இன்னும் சில ஆளுமைகள்
- எச்சரிக்கை
- மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை
- என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
- இலை போட்டாச்சு! – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி
- எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்
- கடித இலக்கியம் – 46
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை !
- An Invitation
- நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா
- இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”
- ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது
- கருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……
- மடியில் நெருப்பு – 26
- தாஜ் கவிதைகள்
- சிறகொடிந்த பறவை
- நீர்வலை – (12)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)
- கிளிஜோசியக்காரரின் தேடல்
- பெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா? –
- நாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்
- ஈசாநபியான இயேசுகிறிஸ்துவின் கருணைக்கு
- கவிதைகள்
- கவிதை மரம்
- பெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- திருட்டும் தீர்ப்பும்
- காதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்
- பூக்கள் என் கவிதைகள்
- தைத்திருநாள் விழா கவியரங்கம்