தாஜ்
பிழை
மோசமான கவிதையிது
பிரசுரத்திற்கு உதவாது.
அடித்தல் திருத்தலாய்
கறுப்பு மை மொழுகலாய்
எழுதும்போதே தெரிகிறது
எல்லாம் காலத்தின் விரயம்.
கற்றுத் தந்த காலமே
காற்றின் சுழிப்பில்
அபகரித்து விடலாம்.
நானேகூட செய்யலாம்தான்
கிழித்து வீசிவிட நாழியாகாது
அத்தனைக்கு கேவலாமாயிது.
படிக்கக் கிடைத்தவர்கள்தான்
சொல்லனும்
எனக்கிது வாழ்க்கை
பிறருக்கது நான்.
(கணையாழி, ஜூலை – 1996)
கவிதை தோழிக்கு இன்றைப்பற்றியும்
தும்பி விட்டுச் சென்ற எச்சத்தைப் பற்றியும்.
கோடை தணிகிறது
முகம் ஜில்லிட
காற்று எழுதிச் சென்ற
செய்தியை வாசிக்கும் முன்
முத்து முத்தாய் தொடர்ந்தது
மழையின் விளக்கம்.
காலடியில் மேவும் ஈரம்
நடையை மாற்றிவிட்டது.
தெளிந்த வானமும்
உறுத்தா வெளியுமாய்
வேர்வையின்
நாற்றமுமில்லை.
செடி கொடி மரங்கள்
பூரணத்தை நோக்க
செழிப்பின் வண்ணமயம்.
என் வீட்டுத் தோட்டத்திலும்
குதூகலத்தின் கூறுகள்.
தவழ்ந்து வந்த சுகந்தத்தில்
மொட்டவிழப் பூத்து நின்றேன்.
வட்டமிட்ட தும்பி ஒன்று
இதழோரம் அமர்ந்து
மகரந்தத்தின் எச்சத்தை
விட்டுச் சென்றது.
– தாஜ்
satajdeen@gmail.com
www.tamailpukkal.blogspot.com
- மௌனத்தின் அலறல்
- துண்டு துண்டாக்கப்பட்ட நான்கு பட்சிகளின் உடல்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்
- கணக்கதிகாரம் பேசும் சதுரங்க செய்திகள்
- உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்
- தாஜ் கவிதைகள்
- இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்
- பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்
- தந்தைமை என்னும் உணர்வு – “அப்பா”- ஈரானியத் திரைப்பட அனுபவம்
- வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு
- வாணர்களும் விந்தியமலையும்
- கடித இலக்கியம் – 28
- காசும் கரியும் !
- அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்
- பெண்கள் சந்திப்பு 2006
- கடிதம்
- இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!
- கருமையம் நிகழ்ச்சி – தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள்
- அஞ்சலிக் கூட்டம் – ஏஜே என்னும் பேரறிவாளன்
- வைதீஸ்வரனின் கவிதைகள்
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8
- இரவில் கனவில் வானவில் – 8
- நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..
- பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி
- பெரியபுராணம் — 109 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- சிந்தனையில் சிலநேரம்
- கீதாஞ்சலி (96) – எனது பிரிவுரை!
- அவலம்
- பதஞ்சலியின் சூத்திரங்கள் – 1
- நேற்று ! இன்று ! நாளை !
- இலை போட்டாச்சு !
- மடியில் நெருப்பு – 9
- National folklore support center