தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
அந்த நாள் வரப்போகு தென்று
அறிபவன் நான்,
கண் பார்வை யிழந்து
மண் பூமி தெரியாத போது!
விழித்திரை யிட்டு
விடுவித்துக் கொள்ளும் என்னுயிர்
நிசப்த நிலையில்!
இரவு வானில் ஆயினும்
என்னைக் கண்காணிக்கும்
விண்மீன்கள்!
விடியும் காலைப் பொழுது
கடந்த நாளைப் போல!
கடல் அலைபோல் இன்ப துன்பங்களில்
மாந்தரை உலுக்கும்,
காலத்தின்
மணிக் கணங்கள்!
ஆயுளின் அந்தி வேளையில் மனத்தின்
அரண் மதில்கள் உடைந்து,
பரிவற்ற களஞ்சியம்
நிரம்பிய
உனது உலகைக் காண்கிறேன்,
மரண வெளிச்சத்தில்!
தாழ்வான ஆசனம் என்ப தில்லை!
கீழான வாழ்க்கை யென ஒன்றில்லை!
வீணாக ஆசை
ஊட்டிய பொருட்களும், வாழ்நாளில்
ஈட்டிய சொத்துக்களும்,
நீங்கி விட்டென்னை
விலகட்டும்!
எறிந்து விட்ட துரும்புகளும்,
நினைவில்
புலப்படா அற்பப் பொருட்களும்,
துணையாய் எனக்கு
நிலைக்கட்டும்!
*****************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 24, 2006)]
- பிடெல் காஸ்ட்ரோ 80′!
- அறிமுகம்
- உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323)
- கீதாஞ்சலி (92) வாழ்வுக்கு மூடு விழா!
- அட்லாண்ட்டிக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் – வெ சா – நாகூர் ரூமி – நேசகுமார் மற்றும் பி கே சிவகுமார்
- பேசும் செய்தி
- யஸ¤குனி ஆலயம் – பாகம் 1
- இன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை?
- கடித இலக்கியம் – 24
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 4
- மறைக்கப்பட்ட உலகம்
- சற்றே மாறுபட்ட தடத்தில் போய்ச் சிந்தித்தால் என்ன?
- முகமூடி ஏதும் இல்லாததே வெ சாவின் தனித் தன்மை
- நிழல் சண்டை
- கடிதம்
- ஓசைகளின் நிறமாலை – கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு
- அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம், தொடர்-2.)
- மரணக் கட்டைகள்!
- பெரியபுராணம் -105 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மடியில் நெருப்பு – 5
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:4)
- பெண்ணுரிமை
- தெளி
- ராஜா வீடும்…கன்றுக்குட்டியும்!
- இரவில் கனவில் வானவில் – (3 & 4)
- திராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை
- என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?
- மனித வேதனையின் மீதொரு மனசாட்சியற்ற சுரண்டல்
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (154 – 188)
- தாஜ் கவிதைகள்
- கடிதம்