சு.மு.அகமது
இதயத்துள் துளை விரிந்து
வழிகிறது இயலாமையின் பரிதவிப்பு
ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவத்தின்
பரிமளிப்பாய் அடக்குகிறது கடன்
பூக்களற்ற பெருவெளி போல்
வாசமிழக்கிறது மனது
இன்றும் நிலைத்து நிற்கிறது
ஒற்றை மரமாய் நட்பு
கடன் கொடுப்பவனோடு
கேள்வியின்றி பதிலுமின்றி
கோப்புகளற்று
அவசர உதவி புரியும்
கந்து வட்டிக்காரன் – என் நண்பன்
காலந் தவறினால்
வங்கி என்ன வாங்கி என்ன?
—————————-
இருளின் ஒரு பதத்தையாவது
வெளிச்சத்தில் படித்திடல் வேண்டும்
வசீகரிக்கும் அதன் குரூர அழகில்
வயப்படாமல் இருக்க
கற்றுக்கொள்ளல் வேண்டும்
கருமை தான் இருளென்றால்
வாழ்வின் வெறுமையும் கறுமை தான்
என்னை அறிமுகப்படுத்திய
இருளின் முகவரி தொலைத்து
வெளிச்சப்புழுதியில் உழன்று இருள்கிறேன்
இருள் கதவின் இடுக்கு வழி
கசியும் இருளில்
என் தேகம் மிளிரக் காண்கிறேன்
பூரணமாய் நான் இருளும் போது
வேர் படர்த்தி மண் கவிந்து
நான் அமிழ்கிறேன்
இருள் இருளாயும்
நான் இருளாயும்
இருளாகி இருள் நோக்கி உதிக்கிறேன்.
——————————
சுகமாய் எனைப் புணர்ந்து
அசதியாய் உறைகிறது காற்று
பேரலையின் ஆரவாரம்
தலையாட்டும் பெருந்தருவின் எதிர்வினை
செயலற்றுப்போய் மென்னியம் உதிக்கிறது
படர்வெளியில் விரல் பிடித்து
நடை பழக்கும் வாசம்
முத்தாத்தனின் மழிக்கப்படாத
முகப்படிமச் சாயலில்
ஆரம்பம் இப்படித்தான்…
புசிக்கப் பழக்கின கனிகள்
அழுகாதிருக்க
புசியப் பழகினதாய்
சுவைத்துப் பழகினவை
செறித்துப் போனதால்
திளைத்துப் போகும் அதன் உலைகள்
தெறிக்கும் துளிகளில் நான்
பெற்றது கையளவு
உன்னுள் கலவாதது உலகளவு
விந்தையின் மேலணியில்
நான் கற்றேன்
நீ கற்பித்தாய்
‘கற்ப’து பொதுவானது.
——————–
musu_7@sancharnet.in
—————–
- புது வழித்தோன்றல்!
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7
- கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..
- நேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு
- மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12)
- கீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..!
- கல்வெட்டாய்வு: ஸானான் வர்த்தினை
- எண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்!
- பெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ஏன் தற்கொலை?
- கவிதைகள்
- கடிதம்
- களையிழந்தக் கச்சேரிகள்
- ஒப்புக்கொண்ட உண்மை
- வடக்கு வாசல் – இசை விழா – நினைத்தாலே இனிக்கும்
- பெண் போனால் . . .
- Screening of ‘a little dream’ a docu-film on Dr.APJ.Abdul Kalam
- கடித இலக்கியம் – 16
- இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்
- கண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )
- அம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32
- கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை
- 2006 தேர்தல் / சில குறிப்புகள்
- உள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்
- தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி
- இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!
- தோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு
- தாய் வீடு
- அட்லாண்டிக்குக்கு அப்பால்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்