கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

டீன்கபூர்



என் விழியில் நூல் அழது

கிழிந்து கிடக்க
என் அறிவு குப்பைத் தொட்டிக்குள்
செத்துக் கிடக்கும்.
என் அருமையும்
என் பெருமையும்.

அறிவுடையோர்
ஆக்கி வழங்கிய அறிவுகள் …
பசித்த குழந்தைகளின்
பால் பருக்கிய போத்தலில்
ஈக்கள் மொய்க்கின்றன.

அரை விலைக்கு கியூவாகி
முற்பணம் மூன்று மாதத்துக்கு முன்
செலுத்தி அன்று
அதற்கென்ற ஆள் திரட்டி
அதற்கென்ற ஆள் புரட்டி.

இப்போ
இலவசம் என்றெண்ணி
இதற்கென்ற
மதிப்பும் மரியாதையும்
ஆறுமாதத்துக்குள்
அழுகி நாறிடும்.

பள்ளி மேசையில் சூடிட்ட மாடாக,
வகுப்பறை நெடுகிலும் காய்ந்த உடலாக,

என் விழியில் நு}ல் அழ
அறியாமல் மூழ்கிறேன்.
மேனி சிலிர்த்தும்
எழ மறுக்கும் மயிருக்குத்தான் தெரியும்
ரோசம் பற்றி.

சுடு நீரை
கண்கள் பனிக்க
அது வழிந்தோடும்
வாய்காலுக்கத்தான் தெரியும்
அதன் வேகம் பற்றி

இயலாமல் நிரம்பிய இதயம்
எங்கோ வெடித்துச் சிதறும் போதுதான்
தெரியும் மரணம் பற்றி.

அன்பனே!
என் அறிவு
உங்கள் அறிவு
மாய்கின்றேன் நாளையும் இன்னொருவர்
என்னை அறிய
ரோசம்
வேகம்
மரணம்
எல்லா படைப்புக்களுக்கும் தான்.
என்று நு}ல் விம்மியது


அர்த்தத்தைத் தேடுவாய்

நீயும் தேடுவாய்;
வாழ்வுச் சட்டிக்குள் கையை விடுவாய்.
உப்பும் உறைப்பும்
ஊறுமா உன் நாவில் என்று.

உளறல் பற்றி ஆய்வு செய்வாய்.
உழைப்புப் பற்றி கனவு காண்பாய்.
மனிதனைத் தேடுவாய்.
மனத்துக்காக மாய்வாய்

முடியாமல் திணறும்
உன் இயலாமைக்காக அழுவாய்.
உன் வாழ்வுப் பாதையை விசாலிக்க
முயற்சிக்கும் எதுவும் முதிராது போகலாம்.

அப்போது நீ அழுவாய்.
நீ மல்கும் போது
உன் விழி உன்னையே நோவும்.
உன் வேகத்துக்குள்
உன் வாகனம் உன்னை இயக்கும் போது.
புhசத்தின் அர்த்தம்
பருமனாவதற்குள்
நான் ஆயிரம் கனவுடன் போராடியிருக்கிறேன்.
நிலவோடு கோபித்து இருக்கிறேன்.
காற்றுக்கு கல்லெறிந்து இருக்கிறேன்.

தெரியுமா உனக்கு?
நெஞ்சுரம் என்பது
தெரியுமா உனக்கு
கர்வத்தின் முதுகை

எதுவும் இங்கு உயர்வுக்கே மரியாதை.

மனசை பாலைக்கு உவமிக்க
உன்னால் தான் முடியும்
என்னுள் வீசும் காற்று
சுழன்றடிப்பதற்குள்
தென்னையைச் சாய்த்துவிட முயல்கிறேன்.

என் உள்ளத்தின் அத்திவாரம்
உறுதியாக இருக்க
என் இரு கரங்களும்
என்னைவிட உதியாக இருக்கிறது.


24 மணி நேரமும்

உயிரின் பெரும் பகுதியை
முத்திரைப்படுத்திய இயலாமையே
ஏன்னுள் உராய்ந்து கொண்டிருக்கிறது.

வுhழ்வின் புத்தகத்தின்
எல்லா பக்கங்களும்
சுpவப்பு நிறத்தால் கிறுக்கப்பட்டுள்ளன.

நேரிய உணர்வின்
புhரிய விளைச்சலை
அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்.

உறவு பொய்மைக்குள் விழுந்து
எழ மறுத்து என் பகுதிகள்
நசிந்து தொங்குகின்றன.

மனசுக்கு என்ற கௌரவம்
து}க்கிலிடப்பட்ட போது
துடியாய்த்துடித்த காலம் வெறுமையாகிவிட்டது.
நாவுக்கு மனிதன் கொடுத்திருக்கும் ஆரோக்கியம்
உறவின் வலிமைக்குக்
கொடுக்கத் தவறிவிட்டான்.

பருந்துகளின் விழிகளிலிருந்து
என் எறும்பு மனசு
ஒளிந்து கொள்வதில்
இன்னமும் முற்சிக்கையில்
வுhழ்வு வயதாகிவிட்டது.

புhரங்களும் பார்வைகளும்
கேள்விகளை உதாசீனப்படுத்தி
நெஞ்சுக்குள் புகைந்தே தோல்வியாகிவிட்டது.

ஏல்லாம் கொஞ்சக் காலத்துக்குள்
மண் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது
இவன் வாழ்வின் யதார்த்தத்துக்காக
இவன் ஆரோக்கியத்துக்கே
பிரார்த்திப்புக்கள்.

இவன்; பாசையின் அர்த்தம்
புணத்துக்காகவும் அல்ல.
சுகத்துக்காவும் அல்ல.

சீவிப்பின் நிம்மதி என்ற
பெருமூச்சுக்காக மட்டுமே.

———————————–
deengaffoor7@yahoo.com

Series Navigation

author

டீன்கபூர் - இலங்கை

டீன்கபூர் - இலங்கை

Similar Posts