ஹெச்.ஜி.ரசூல்
ஊருணிக் கரையில் விழுந்து புரண்டு
தேடல் மேவிட காத்திருக்கின்றன வார்த்தைகள்
மழைச்சாரலின் ரசனையில்
ஏதோ ஒன்றின் வருகை குறித்த
நிறைவேறா காதலுடன் தனிமையின் காட்டுக்குள்
மெளனத்தின் தடயங்களை விட்டுச்செல்கின்றன.
சிறகுகளை பொருத்தி தாவிக் குதித்து
பறந்தோடிப் பார்த்து திரும்பவும்
மண்ணில் புதைத்துக் கொண்டு
பிறிதொரு சந்தர்ப்பத்தில் துளிர்விட்ட
செடியின் இலைகளாய் அசைதல் துவங்குகிறது.
பிரிவின் வலியும்
வலி மற்றொன்றாய் உருமாறும் தோற்றமும்
மீளாப் பயணத்தை மேற்கொள்ள
பறவையின் தூரங்கள் கடக்கப்படுகிறது
2)
அகமனப் பேச்சாய் விரியும் படிமங்கள்
உள்ளொடுங்கிய தயக்கம் நிறைந்த
கூச்ச சுபாவமுள்ள
பேதலித்துக் கிற்ங்கிய உலகமாய்
தன்னை வெளிப் படுத்த
எங்கும் நிறைந்தது வெளி
நேற்றின் மகிழ்வும் துக்கமும்
வெட்கமாய் பேசி
ஓடிப்போன ஞாபகங்களை
காற்றினுள் தழையவிடுகிறது
விரித்து அடுக்கடுக்காய் மடிக்கப்பட்ட
உணர்வுப் படிமங்கள்
இயல்பின் தவிப்பை அணிந்து
வாழ்தலின் பரப்பினுள் அலைதலுற்று
மிதக்கிறது மேலும் கீழும்.
————————————
mylanchirazool@yahoo.co.in
- சாகசமும் மனித நேயமும் – எனது இந்தியா – கட்டுரைகள் – ஜிம் கார்பெட் – (தமிழில் யுவன் சந்திரசேகர்)
- செர்நோபில் அணுமின்னுலை விபத்துக்குக் காரணமான இயக்கநெறி முறிவுகள்!-9
- ஜோதீந்திர ஜெயின் உரை – இந்திய ஜனரஞ்சகக் கலாசாரம் பற்றி
- காவளூர் அமர்ந்த கந்தப்பெருமான்
- மறு நவீனத்துவம்/ரெமொ/ரீமாடனிசம்
- மெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு
- திருக்குறள் ‘திருந்திய’ பதிப்பு?
- அபத்தம் அறியும் நுண்கலை – 1
- கீதாஞ்சலி (78) பூரணப் படைப்பில் குறை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கடித இலக்கியம் – 10
- சாந்தனின் எழுத்துலகம்
- படிக்கப்படுபவை நடிக்கப்படுகையில்…
- ஜானகி விஸ்வநாதன் செய்திப்படம் “தீட்சிதர்கள்” வெளியீடு
- கண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி?
- ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்
- பொருள் மயக்கம்
- எழுத்தில் எளிமை வேண்டும்
- கடிதம்
- தாஜ் எழுதிய ‘விமரிசனங்களும் எதிர்வினைகளும்’ அருமையான கட்டுரை
- கூற்றும் கூத்தும்
- ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்
- பறவையின் தூரங்கள்
- எடின்பரோ குறிப்புகள் – 19
- கம்யூனிசத்தின் பூலோக சொர்க்கம் – வட கொரியா
- இந்தி,இந்தியா, இந்தியன்
- டாவின்சி கோட்டினை முன் வைத்து – 1
- பா த் தி ர ம்
- வினை விதைத்தவன்
- தீபாவளி வெடி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 26
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 5. உடை
- இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… மேலும் சில விவரங்கள்
- வெள்ளாரம் கல்வெட்டு குறித்து…
- விழிகளின் விண்ணப்பம்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 93 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நெஞ்சே பகை என்றாலும்
- சிந்திப்பது குறித்து…..
- கவிதைகள்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து
- புலம் பெயர் வாழ்வு 14
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-6)