எச்.முஜீப் ரஹ்மான்
ஒன்று : நிச்சயமின்மை
வெறுமையில் இருப்பதாக
சுய பிரஸ்தாபம் கொள்ளுமொரு நிலை
இனியில்லை
மையம் விளிம்பை காவுக் கொண்டு விட்டது
எந்த நேரத்திலும்
சூனியப் பிளவில் பிரவேசிக்க நேரலாம்
காற்றின் வேகத்தில் செல்லும்
மேகங்கள் கூட கரு கொண்ட பின்னே
பிரசவிக்கின்றன.
இது முன்னின்றலின் இயங்கா விதி
எந்த ஒரு தருணமும்
ஒரு பித்தனாகவோ
சித்தனாகவோ செய்யலாம்.
நிச்சயமின்மையில் சிக்கி
தவிப்பதாக எழுந்த அவிப்பிராயம் கூட
வெறுமையில் சென்று முடிகிறது
இனி சுய பிரஸ்தாபம் தேவையில்லை.
இரண்டு : நட்சத்திரங்கள் மறையுமா?
நேற்றைய நாளின் கடைசி
கணங்களில் உதித்திருக்கும் சில
நட்சத்திரங்களைப் பற்றி
சொல்லியாக வேண்டும்
நட்சத்திரங்களை இதற்கு முன்பு
அறிந்ததைப் போல இல்லை
என்று நம்புவதிலிருந்து தான்
இந்த நட்சத்திரங்களைப் பற்றி
சொல்லமுடியும்
ஒரு புழுக்கத்தில் உதித்த இவை
அசாதாரணமாக
சூரியனை விட பெரிதாக இருக்கிறது.
நான்கு திக்கிலுமாக நின்று
நான்கு வர்ணங்களில் ஒளியை
உமிழ்ந்து கொண்டிருப்பதாக
கடைசியில் கிடைத்த தகவல்கள் சொல்லுகின்றன
எனினும் ஒன்றை மட்டுமே
ஊர்ஜிதம் செய்ய வேண்டியிருக்கிறது
அவை மறையுமா என்று.
மூன்று : வேகவேகமாய் ஒரு வேகம்
ஒரு வேகம் சிறந்தது என்றுச் சொல்லப்பட
ஆயிரம் காரணங்கள் இருக்கிறது
அந்த வேகத்துக்கு முன்னால்
எதுவும் சென்றுவிட முடியாது
என்ற நம்பிக்கையும்.
வேகவேகமாய் ஒடிக்கொண்டிருக்கும்
அந்த வேகத்தைப் பற்றி ஓரிரு நாள்களுக்குள்
ஏதாவது முடிவுக்கு வரலாம்
ஆனால் வேகம் முடிவுக்கு வராது என்று தெரியாமலாயிருக்கும்
என்றோ துவங்கிய அந்த வேகம்
எங்கே செல்லுகிறது என்று
அவதானித்தே காலங்கள் மேலிருந்து கீழாக
விழுந்துக் கொண்டிருக்கிறது
ஒரு நிலையில் தான் வேகம் செல்கிறது
என்று சொல்வதற்க்கான நிலை
வேகத்திலிருந்தே பெறப்படுகிறது என்று
சொல்லமுடிந்தாலும்
வேகம் பற்றிய நிச்சயமின்மையே
மீண்டும் மீண்டும்
அதை பேசச் சொல்கிறது.
——————————–
mujeebu2000@yahoo.co.in
- சாகசமும் மனித நேயமும் – எனது இந்தியா – கட்டுரைகள் – ஜிம் கார்பெட் – (தமிழில் யுவன் சந்திரசேகர்)
- செர்நோபில் அணுமின்னுலை விபத்துக்குக் காரணமான இயக்கநெறி முறிவுகள்!-9
- ஜோதீந்திர ஜெயின் உரை – இந்திய ஜனரஞ்சகக் கலாசாரம் பற்றி
- காவளூர் அமர்ந்த கந்தப்பெருமான்
- மறு நவீனத்துவம்/ரெமொ/ரீமாடனிசம்
- மெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு
- திருக்குறள் ‘திருந்திய’ பதிப்பு?
- அபத்தம் அறியும் நுண்கலை – 1
- கீதாஞ்சலி (78) பூரணப் படைப்பில் குறை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கடித இலக்கியம் – 10
- சாந்தனின் எழுத்துலகம்
- படிக்கப்படுபவை நடிக்கப்படுகையில்…
- ஜானகி விஸ்வநாதன் செய்திப்படம் “தீட்சிதர்கள்” வெளியீடு
- கண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி?
- ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்
- பொருள் மயக்கம்
- எழுத்தில் எளிமை வேண்டும்
- கடிதம்
- தாஜ் எழுதிய ‘விமரிசனங்களும் எதிர்வினைகளும்’ அருமையான கட்டுரை
- கூற்றும் கூத்தும்
- ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்
- பறவையின் தூரங்கள்
- எடின்பரோ குறிப்புகள் – 19
- கம்யூனிசத்தின் பூலோக சொர்க்கம் – வட கொரியா
- இந்தி,இந்தியா, இந்தியன்
- டாவின்சி கோட்டினை முன் வைத்து – 1
- பா த் தி ர ம்
- வினை விதைத்தவன்
- தீபாவளி வெடி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 26
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 5. உடை
- இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… மேலும் சில விவரங்கள்
- வெள்ளாரம் கல்வெட்டு குறித்து…
- விழிகளின் விண்ணப்பம்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 93 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நெஞ்சே பகை என்றாலும்
- சிந்திப்பது குறித்து…..
- கவிதைகள்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து
- புலம் பெயர் வாழ்வு 14
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-6)