தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
அது அவனேதான்!
ஆத்மாவின்
உட்கருவுக் குள்ளே உறைபவன்!
கரத்தால் என்னை ஆழத்தில்
தொட்டெழுப்பி
விழிக்க வைப்பவன்,
அனுதினமும்.
அது அவனேதான்!
எந்தன் இரண்டு விழிகளுக்கும்
மந்திர சக்தி யூட்டுபவன்!
பல்வேறு வழிகளில்
போகம், சோகம் பின்னிய
கீதங்களில்
இதய வீணையின் நரம்புக் கம்பிகளை
உவகையுடன் மீட்பவன்,
அது அவனேதான்!
துள்ளி விட்டு மறையும்
வெள்ளி, பொன்னிற மயத்தில்
பச்சை, நீல வண்ணத்தில்
மாய வலைதனை நெய்பவன்!
மடிப்புகள் ஊடே எட்டிப் பார்க்கும் அவன்
பாதங்களின்
பஞ்சுத் தொடுகையில்,
நெஞ்சம் மறந்திடும் என்னிலை!
நாட்கள் நகரும், யுகங்கள் கடக்கும்
எனினும் எப்போதும்
என்னிதயத்தை இயக்குபவன்,
அது அவனேதான்,
பலப்பல பெயர்களில்,
பலப்பல வேடங்களில்,
உன்னத மகிமையில் உவப்பூட்டும்
பலப்பல இன்ப துன்ப
உணர்வுகளில்!
*****************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 22, 2006)]
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)
- “தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்
- பூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம்
- செர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5
- இளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு
- கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.
- இளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு
- கடித இலக்கியம் – 6
- நரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு
- ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்
- மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..?
- வளர்ந்த குதிரை (4)
- அக்ஷ்ய திருதியை
- ஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்
- கடிதம்
- கடிதம்
- அறிவு ஜீவிகள்………?!
- கடிதம்
- கடிதம்
- லெமூரியா கொண்ட கலைஞர்
- அரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்
- புன்னகையின் பயணம்…
- மறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22
- குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 4
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)
- வானமே கூரை.
- தனிமரம் நாளை தோப்பாகும் – 4
- மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல்
- புலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்
- நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி
- இட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்
- ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்
- கயிறெடுத்தான் உயிரெடுக்க
- நெருப்பு நெருப்பு
- பெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- யாருமற்ற கடற்கரை
- கடிதம்