இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

வெங்கடேஷ் வரதராஜன்


காத்திருத்தல்

நீ வரும் பாதையில்
காத்திருந்த காலங்கள்
நீ கடந்து சென்ற பின்னர்
நகரவிடாத பொழுதுகளாய்
மாறி இம்சைதரும் கணங்கள்.

இப்போதெல்லாம் அப்பாதையில்
நீ வருவதில்லை.
நானும் காத்திருப்பதில்லை..

எனினும், காத்திருத்தல் நிகழாமலில்லை.
யாரோ யாருக்காகவோ
காத்திருக்கத்தான் செய்கிறார்கள்
பாதை நெடுகிலும்.

நிறுத்தமில்லாப் பயணம்

நீ இருக்கும் பேருந்தில்
இறைச்சல் இம்சைகள் தெரிவதில்லை.
ஆள்கூட்ட நெரிசல்
பழகிப்போயிருக்கும் உனக்கும்.

இருந்தும்,
எல்லாமே தீர்மானிக்கப்பட்ட பொழுதுகளாய்
இறங்கிச்செல்வாய் உன் நிறுத்தம் வந்ததும்.
எப்போதோ நிகழப்போகும்
நம் சந்திப்புகளிற்கு
ஒத்திகை பார்த்துக் கொள்பவனாய் நான்.
——————————————–
vencut_v@yahoo.com

Series Navigation

author

வெங்கடேஷ் வரதராஜன்

வெங்கடேஷ் வரதராஜன்

Similar Posts