அலறி
(01)
அந்திநேர மஞ்சள் வெயில்
வெயில் காய்ந்து மெலிந்து
படுவான்கரைப் பற்றைக்குள்
இறங்கிற்று
பூவரசம் பூக்களில் படிந்து
வைக்கோல் கற்றையில் தெறித்து
மெல்லென முதுகு சுடும்
அந்தி நேர மஞ்சள் வெயில்.
நவியான் குளக்கட்டில் நிற்கிறேன்
சைக்கிளைச் சாத்திவிட்டு
அரிசி ஆலை உமிமேட்டில்
எலும்பு கவ்வி நாயொன்று நகா;கிறது
தோணி மிதந்த தடங்களில்லை குளத்தில்
தூண்டிலிடும் கிழவனுமில்லை
மீன் கூடை கவிழ்ந்து கிடக்குது
நெடு நாட்கள் கழித்து
உப்பு மிளகாய் உறைப்புக்கறி
ருசித்து நாவூறி
குளத்து மீன் தேடி
கறகறக்கும் கறள் சைக்கிளில்
வியர்வை கசிய இழுத்து மிதித்து
சபித்து விட்டுப் போன
நவியான் குளக்கட்டுக்கு
மீண்டும் வந்துள்ளேன்.
குளம் நிரம்பி வழிந்து
மீன்கள் குதித்த பொழுதொன்றில்
காற்றுக் கந்துகளை விலத்தி
புத்தம்புது மோட்டார் சைக்கிளில்
விர்ரென்று விரைந்து
இவ்விடம் நிற்கையில்…
பிடரி மயிர் பிடித்திழுத்து
தொண்டைக்கடியில் துவக்கு வைத்து
பறித்த
எனது மோட்டார் சைக்கிளின்
இலக்கம் 158-4628
வண்டில் மாட்டிடம்,
விறகு வெட்டிகளிடம்
கப்பம் பறிக்க முண்டி
அதிலேறிப் பறந்தனர்.
புகை மணம் மட்டும்
என் நாசிக்கான் அடைத்து…
பக்கத்தில் எருமைகள் இரண்டும்
அடைக்கிலக் குருவியும்
பார்த்திருக்க
எறித்ததும் இதே
அந்திநேர மஞ்சள் வெயில்.
0
(02)
கல்குடா
எரித்த சாம்பல்மேட்டின்
சூடு இன்னும் தணியவில்லை
எழுபதாம்,
எழுபத்தெட்டாம் முறையும்
கலவரமடைந்து, பீதிசூழ்ந்து
நேற்றுப் போலல்ல
மூன்று நாட்கள் நீடித்து
ஹா;த்தால், கடையடைப்பு
நிகழ்ந்திற்று.
சமாதானத்தின்கையெழுத்து
மயானம்வரை நீள்கிறது
இங்குதான்
இங்கிருந்துதான்.
அடக்கப்பட்டவர்களின்
ழூழூகபுறுஸ்த்தானில்
புற்கள் முளைப்பதற்கிடையில்
பூக்கள் மலர்வதற்கிடையில்
ஆட்டோவில்,
அறுவடை வயலில்
குதறப்பட்டவர்களின் ஈனவொலி
ஆற்றை நிறைத்து
காற்றைக் கிழித்து
கடலை மறித்திற்று.
மியான்குளத்தில்
பாலத்தின் அடியில்
ஈழக்கொடி கவிழ்ந்து
முந்தைய முகத்தை மீளக்காட்டிற்று
மனிதாபிமானத்தின் வேரையும்
சேற்றில் புதைத்திற்று.
முக்காட்டு நீர்பெருக்கிட்டு
கடதாசி ஆலை முகடு கிழித்து
ரெயில்வே ஸ்டேஷன் கதவு தகா;த்து
படகுத்துறையில் இறங்கிற்று
அது-
பூமிக்கடியில் தீயாய் படிந்து
எமது தேசத்தின்
எல்லை பிளக்கும்
பொதுச்சுவர் எழும்பும்.
அந்நாள் தூரித்தும்
ஆர்ப்பாட்டமாக…
ஊர்வலமாக…
இடிமின்னலுக்கிடையிலும்
இருள்-
ஒளிர்ந்துகொண்டுதானிருக்கும்.
0
ழூகல்குடா – ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பிரதேசம்
ழூழூகபுறுஸ்தானம் – முஸ்லிம்களின் அடக்கஸ்த்தலம்
(03)
கோடை வெயிலில் ஒரு கள்ள மழை
கொதித்துக் கொதித்து வழிகிறது
சூாியன்
கருகிக் கருகிச் சுருள்கிறது
பூக்கள்
செடிகொடிகள்
ஆகாயத்தில் அடுப்பு மூட்டி
சூாியனைக் காய்ச்சுவது யார்
அனலாய்த் தகிக்கிறது வெயில்
ஆவியாய்ப் பறக்கிறது ஆறுகள்.
ஒரு கோப்பைத் தண்ணீர்
கொடுப்பாரின்றித் தவிக்கிறது குளம்
நீர்க் கரை தேடி ஓடிய ஓடைகள்
திரும்பவில்லை.
வெயிலைத் தள்ளியவர்கள்
தலையில் சுமந்து திாிந்தவர்கள்
பாரம்தாங்காமல்
வியர்த்துக் களைத்து
மரத்தின் கீழ் ஒதுங்குகின்றனர்
நிழலும் தீய்க்கிறது.
மழையே!
இந்நேரம் நீ யெங்கு போனாய் ?
முகிலாய்த்; திரண்டு
கடலுக்குள் ஒழித்ததேன்
ஒரு பாட்டம் சாியேன்
பயிர் பச்சை குடித்து முழுக
இதோ!
துளிர்த்துப்பெய்கிறது மழை
கொதிக்கவைத்துச் சூடாக்குது வெயில்
மாலை
தேனீர் தயாாிக்கலாம்.
0
(04)
அவள் மூழ்கும் இரவுக் கவிதைகள் இரண்டு
01.
அலைகள் ஆர்ப்பரித்தடங்கும்
இன்றின் இரவு
நதியாய் நீளும் உன் நினைவுகளை
காற்றள்ளிச் சென்று
அடிவானில் புதைக்கிறது.
நட்சத்திரங்கள் அங்கு
பூத்துப் பின் உதிர்கிறது.
இந்த இரவென்ன
ஒரு கோடி நிலவல்ல
ஆழ் மனதில் உச்ச வலியெழுப்பி
விம்மிக் கரைகிறது
எனக்குள்
அமாவாசை
அடை மழை
முன்பனி இருளென
எத்தனை இரவுகள் நமக்குள் கரைந்திருக்கும்
முதன் முதலாய்
உன் மார்பில் முகம் புதைத்து
மெதுவாய், மெதுமெதுவாய்
கழுத்துவரை முன் நகா;ந்து
இதழ்கள் நனைத்த இரவொன்று
வெட்கப்பட்டு
உன் கூந்தல் காட்டுக்குள் மறைந்தது
பின் மீளவில்லை.
பெளர்ணமிக்கு முந்திய
இன்னொரு இரவில்
உன் தேகமெங்கும் விரல் நெளிய
வெட்கிச் சிவந்து நீ தடுக்க
விரல் நுனியை நான் கடிக்க
ஆய்… எனச் சிணுங்கிய மெல்லொலி
இரவுப் பறவையின் தொண்டைக்குள் சிக்கி
பாடலாகி ஒலித்தது
இதுபோல எத்தனை இரவுகள்
நமக்குள் கரைந்திருக்கும்
மோகம் முத்திய விரகத்தில்
உருகி ஊத்துண்டு
பூனையாய்ப் பதுங்கி
பழைய வீட்டின் பின்பக்கம்
மூங்கில் கீற்றாய் நீயும்,
தீக்காற்றாய் நானும்
பற்றியெரிந்த இரவை
இலையுதிர்த்து மாவும்
கிளை விரித்து வாகையும்
மூடியல்லவா அணைத்தது.
பின்வந்ததும்
ஈற்றானதுமான பிறிதொரு இரவு
பிரிவின் பெருந்தீயை மூட்டியெரித்து
நீயழுத ஏழு கடலை
ஓர் மிடறில் குடித்து
மூவாயிரம் பகல்களுக்கப்பால்
வீழ்ந்தது.
இன்னும் அவ்விரவு விடியவில்லை…
விடியவேயில்லை…
02.
இரவின் அகன்ற விழிகள்
விரிந்து
விரிந்து
அறை முழுவதும் நிறைந்திருக்கிறது
காரிருள்
இருளின் வெளிச்சத்தை
பேரிறைக்கும்
அவள் கண்களை
அடர்ந்த கூந்தலை
மேனியின் கருமையை
அறையெங்கும் தேடுகின்றேன்.
இரவோடும்
இருளோடும்
அள்ளிச் சென்றுவிட்டாள்.
அமாவாசை நாளொன்றில்
அவிழ்த்துக்கிடந்த கூந்தலிலிருந்து
உதிர்ந்த ஒற்றை முடி ஒளிர்ந்து
கைகளுக்குள் சிக்கிக்கொள்கிறது.
அதன் ஈரம் இன்னும் உலரவில்லை
அவள் நினைவின் சுடராய்
ஆயிரம் இரவுகளுக்கும்
இனி நீண்டிருக்கப்போவது
இக்கூந்தல் முடி மட்டும், மட்டும், மட்டும்…
0
அலறி, இலங்கை
- ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு
- கடிதம் – ஆங்கிலம்
- 365 நாட்கள் 365 முகாம்கள் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சம்ஸ்க்ருதபாரதி
- அவுரங்கசீப் VS அரவிந்தர் நீலகண்டர்
- கடிதம்
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் . . . (1)
- திருவிழாவுக்குப் போன ஒரு கதை
- போயஸ்கார்டன் கேட் அருகில்
- உண்மையின் ஊர்வலங்கள் – ஊர்வலம் 2
- நான் கண்ட சிஷெல்ஸ் – 12. மக்கள் வாழ்க்கையும் – கலாச்சாரமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் – ஆங்கிலம்
- ஒளியின் மழலைகள் புத்தக வெளியீடு – பிப்ரவரி 25,2006
- கடிதம்
- கடிதம் – ஆங்கிலம்
- வாழ்க கற்பக விநாயகத்தின் நேர்மை! ஒழிக மலர்மன்னனின் பொய்கள்!
- கீதாஞ்சலி (63) வழிகாட்டித் துணைவன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும்
- புலம் பெயர் வாழ்வு (2)
- அடுத்த இரு வாரங்கள் – ஒரு முக்கிய அறிவிப்பு
- சூபியின் முகமூடி மட்டும்
- தமிழில் உலகப் புகழ் பெற்ற அறிமுக நூல்கள்
- அ.ந.க நினைவு தினக்கட்டுரை (14-02-2006): தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்!
- சொற்புணர்ச்சி விளக்கச் சொற்கள் – 4
- அலறியின் கவிதைகள்
- விவேகானந்தர் பாறையும், ராணி மங்கம்மா கடிதமும், மைசூர் மூக்கறுப்புப்போரும்
- ரொமீலா தாப்பர் கூறும் கோவில் வரலாறை முன் வைத்து சில குறிப்புகள்
- விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து.
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-11) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – (இலக்கிய நாடகம் – நான்காம் பகுதி)
- சூது
- அதிசயம்!
- லுா ஸ்
- பட்ட மரம்
- மணிமேகலை பிரசுரம் – தமிழ் சேவையா ? வியாபார தந்திரமா ?
- கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்
- நல்ல அறிகுறி
- கவிதைகள்
- எனது கனவில் சிரித்தவர்கள்
- ஆதிக்கத்தின் நுண்ணரசியல்
- அலகிலா விளையாட்டு
- எனக்கொன்றும் பிடிக்கவில்லை
- பெரியபுராணம் — 78 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- எடின்பரோ குறிப்புகள் – 10
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ : அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!
- பழிவாங்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 10