விஜய் கங்கா
நகர் குறிப்புகள்
வெடித்த தென்னம்பிள்ளைகளின்
பலமற்ற அசைவில்
துலங்குகிறது
குன்றிய ஊட்டமும்
வந்து சேரா நீரும்
செவ்வக கதவம் திறந்ததும்
வீசும் வேப்பங்காற்றதில்
முன்பிருந்த நற்குணமணம்
வற்றியதுணருகிறது நாசி
பேறுக்காக புகலிடம்
கிடைக்காது
சாளர வலையில் துளையிட்டு
இல்லம் புகுந்து கூடு கட்டிவருகிறது
தாய்மையுற்ற தோட்டத்து அணில்
இரை தேடும் முனைவற்று
வீட்டின் பின்புறம் சிதறும்
உணவு பருக்கைகளை
பகிர்ந்துண்ண பழகிக்கொண்டன
காக்கைகளும் புறாக்களும்
குளக்கரையோரம் இயங்கும்
சுத்திகரிப்பு சாலையதின்
பகலை கரியாக்கும்
கரும்புகையை
இரவென எண்ணி
விழித்துக்கொள்கின்றன
கீழ்க்காட்டில் ஆந்தைகள்
தென்னையும் வேம்பும்
சாயும் வேளை
மேற்றிசையில்
அஸ்தமனமாகுகிறது
ஓர் சாம்பற் சூரியன்
***
குறுநிலமும் குறுநணியும்
வனம்சூழ் குடிலெங்கும்
விரைந்திடும் மாருதமும்
விரிந்த பூவிதழ் நுழைந்து
தேனுண்ணும் வண்டினமும்
மலரிடை சேர்க்கும்
மகரந்த துகள்களின்
தளராத சுழற்சிக்கு
தடைகள் அகற்றி
அருகாக அமையாத
குடியிருப்புகளுக்கு
தூரமாகும்
நீண்டுவரும்
சுவாசகாசமும்
நற்காற்று நுகராத
நாசியின் கிலேசமும்
****
ஒலிக்கோட்டில் ஓர் மாசுபுள்ளி
மெளனங்கள்
அடர்த்தியானவை
பெருகிவரும் நெரிசலில்
அரிதாய் கிடைக்கும்
தனிமையின் வரங்கள்
இச்சைக்களைந்து
மனதை மீட்டுத்தரும்
சீறிய உரங்கள்
ஒலியின் அளவுகோளில்
மென்மையின் பதங்களாய்
நடுப்புள்ளித்தொட்டு நிற்கும்
மொழியும் இசையும்
மெளனத்தைப் பிரிந்து
தூர செல்ல செல்ல
வன்மை பெருக்கியபடி
நரம்புகளின் அயர்ச்சிக்கு
வித்திட்ட வண்ணம்
ஓங்கி நிற்கும்
இரைச்சல்
ஒலியின்
எல்லைக்கோட்டில்-
இயந்திரங்களின் தொடர்
சப்த வடிவிலும்
வாகனங்களின்
இடையறாத ஓட்டத்தில்லும்
கேளிக்கை பேரொலிகளிலும்,
மனதை மாசுறுத்திவரும்
பெருநகர நாகரிகத்தின்
உப விளைவுகளாய்
***
cv_ganga@yahoo.com
- ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு
- கடிதம் – ஆங்கிலம்
- 365 நாட்கள் 365 முகாம்கள் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சம்ஸ்க்ருதபாரதி
- அவுரங்கசீப் VS அரவிந்தர் நீலகண்டர்
- கடிதம்
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் . . . (1)
- திருவிழாவுக்குப் போன ஒரு கதை
- போயஸ்கார்டன் கேட் அருகில்
- உண்மையின் ஊர்வலங்கள் – ஊர்வலம் 2
- நான் கண்ட சிஷெல்ஸ் – 12. மக்கள் வாழ்க்கையும் – கலாச்சாரமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் – ஆங்கிலம்
- ஒளியின் மழலைகள் புத்தக வெளியீடு – பிப்ரவரி 25,2006
- கடிதம்
- கடிதம் – ஆங்கிலம்
- வாழ்க கற்பக விநாயகத்தின் நேர்மை! ஒழிக மலர்மன்னனின் பொய்கள்!
- கீதாஞ்சலி (63) வழிகாட்டித் துணைவன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும்
- புலம் பெயர் வாழ்வு (2)
- அடுத்த இரு வாரங்கள் – ஒரு முக்கிய அறிவிப்பு
- சூபியின் முகமூடி மட்டும்
- தமிழில் உலகப் புகழ் பெற்ற அறிமுக நூல்கள்
- அ.ந.க நினைவு தினக்கட்டுரை (14-02-2006): தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்!
- சொற்புணர்ச்சி விளக்கச் சொற்கள் – 4
- அலறியின் கவிதைகள்
- விவேகானந்தர் பாறையும், ராணி மங்கம்மா கடிதமும், மைசூர் மூக்கறுப்புப்போரும்
- ரொமீலா தாப்பர் கூறும் கோவில் வரலாறை முன் வைத்து சில குறிப்புகள்
- விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து.
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-11) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – (இலக்கிய நாடகம் – நான்காம் பகுதி)
- சூது
- அதிசயம்!
- லுா ஸ்
- பட்ட மரம்
- மணிமேகலை பிரசுரம் – தமிழ் சேவையா ? வியாபார தந்திரமா ?
- கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்
- நல்ல அறிகுறி
- கவிதைகள்
- எனது கனவில் சிரித்தவர்கள்
- ஆதிக்கத்தின் நுண்ணரசியல்
- அலகிலா விளையாட்டு
- எனக்கொன்றும் பிடிக்கவில்லை
- பெரியபுராணம் — 78 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- எடின்பரோ குறிப்புகள் – 10
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ : அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!
- பழிவாங்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 10