கவிதைகள்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

அன்பாதவன்


வாழ்வின் ருசி
பட்டமரத் துலர்ந்த கிளையொன்றில்/ வந்தமர்ந்த பறவையின் இசைத்தூவல்களில்/ மெல்லத்துளிர்க்கிறது மரம்
காயம்பட்ட மனசுக்கு/ மருந்திடும் உரையாடலில்/ மறக்கிறது மனவலி
பரிவு நிறைந்த விரல்களின்/தீண்டலில் மறைகிறதென்/கண்ணிணிர்க்கோடுகள்
ஓசைகளே வாழ்வாகிக் கழியுமென்/பொழுதுகளில் ருசிக்கிறாய் சங்கீதமாய்
வறண்ட மனதில் மழைத்துளியாய்/வீழ்கிறதுன் புன்னகை/
கவிழ்ந்த இருள் போர்த்தி/இருண்டிருக்கும் என்வானில்/ஒளி பொருத்துகிறாய்
நீ இசைநீஒளிநீபுதிர்நீபுன்னகை
உனக்கு நானும் எனக்கு நீயுமாக/ஊட்டிக்கொள்வோம்/வாழ்வின் ருசியை.


பெருநகரப்பிசாசு
1.வேகமாய் ஊர்கின்றன மின்வரட்டைகள்/அட்ச தீர்க்க இரும்பு நரம்புகளில்/பெருநகரத்தை இணைத்து
கூரையிலும் பயணித்து/குவிந்து நிறைந்திருக்கும் பெருங்கூட்டம்
பெருங்குவியலூடே நிற்கிறேன்/துணையற்றத் தனிமையை/விழுங்கி செரித்து.

2.பாதங்கள் அனுமதித்த இடைவெளியில் //செருகிக்கொள்வேன்/கைப்பிடியிலும் தொங்கி வருவேன்/
மூச்சிருக்கும் துணிக்கடை பொம்மையாய்

ஏற்றி இறக்கித் தள்ளும்/இயந்திரக் கூட்டம்/
கண்மூடிப் பயணிணிணித்து திறக்க/கோப்புகளுடன் வரவேற்கும் அலுவலகம்

3.மாநகரச் சதைக்கோளத்தாக்குதலில்/பயனற்று வழியும்/சக்தி

4.கால்களில் சிறகு முளைத்தவனுக்கு/கூடடையும்போது/வரமறுக்கும் தூக்கம்/உளைச்சலைத்தணிணிக்க உதவும்/உறக்க வில்லைகள்

5.ஒரு ராட்சச மிருகத்தைப்போல/விழுங்க யத்தனிக்கும்/பெருநகரப்பிடியிலிருந்து தப்பிக்க/லாகிரி நுகர்ந்து
சுய மைதுன த்துணையுடன் தூங்கி/விழித்து வாசல் திறக்க/
கதவருகே காத்துநிற்கும் வேகம்.


மூன்று கவிதைகள்
# 1
பால்வீதியின் பரந்த வெளியில் மிதந்து
நட்சத்திரங்களின் இடைவெளியில் புகுந்து
திசைகளின் ஒளி படாத பிரதேசங்களுக்கெல்லாம்
பிரவேசிக்க கனாக்கண்ட பறவையொன்று அமர்ந்திருக்கிறது
சிறகுகள் வெட்டியெறியப்பட்டு
காறி உமிழ்ந்தேன்
கால்களைப் பிணைத்த கனத்த சங்கிலியின் மேல்
நிசப்தப் பட்சியின் நெற்றியில் முத்தமிட்டு.
# 2
ஞாபகங்கொள்ளவியலா மாநகரின் சராசரிகளுக்குள்
வித்யாசமானதாய் அழைத்ததொரு
கருத்த மிருகம்

அகண்ட மார்பும் வலிய புஜங்களும்
மிருக பலம் சொல்பவை
கண்களுக்குள் கனவுகள் பலதயும் அடைகாத்ததின்
உரையாடல்களில் ததும்பும் நகைச்சுவை

‘இயல்பே இதுதானோ… ? ‘
‘எனக்குமுண்டு எனக்கேயெனக்கான தனீச்சோகங்கள் ‘
-கம்மியக்குரலில் மெல்லியப் புன்னகை மிளிர

காலாற நடக்கவிரும்பிய
வலிய மிருகம் கட்டப்பட்டிருந்தது
பல்வேறு முளையடித்த கயிறுகளில் நகரவுமியலாமல்

நம்பிக்கையோடு உரையாடுகிறது மிருகம்
கண்களில் கனவுகள் மின்ன.

# 3
தனித்திருந்தவன் உடலைப்
பிணைத்திருக்கிறது நாகமொன்று

தீண்டத் தீண்ட பரவுகிறது
இன்பவிஷம்

ஒவ்வொருக் கொத்தலும் வெவ்வேறு வகையாக
குருதி வெளியேற்றி
குடியேறியது ஆலகாலம்

அயர்ச்சியாய் இருக்கிறது மீண்டுத் திரும்புதல்
என சலித்த நாகத்தை
அணியாய் தரித்தேன் சிவனாய்


கொக்கு

இரவின் மடியில் தலைவைத்து படுத்திருந்தவனை
தொட்டெழுப்பியது மாயக்கரமொன்று

வளைக்கரத்தின் ஸ்பரிச இசையில்
தனை மறந்தவன் சுக மயக்கத்தில்

நகத்தீண்டலில் சிலிர்க்குமுடலை கரமேந்தித்
தழுவுகையில் கலக்கிறது உயிர்க்கலவை

மூச்சனலில் உருகி வழியும் காமம்
வியர்வை நதியாய்

பேசுகிறோம்;பிதற்றுகிறோம்;பித்தமென உளறுகிறோம்
அர்த்தங்களை தொலைத்த வார்த்தைகளைத் தேடிச் செதுக்கி
சிற்பமாக்கும் முயற்சி;அரூபச்சிற்பம்

ஏதொ ஒரு சுழலுக்குள்
இழுத்துப்போகிறது உருவமற்றக்குரல்

நீந்தி விளையாடலில் நேரம் போவதறியாமல்
சேவல் கூவத் திடுக்கிட்டு விலகி நாணம் குழைய
தழுவுகிறாள் காற்றாய்
அணைத்தக்களைப்பில் ஆனந்த அயர்ச்சி

கூடலை முடித்த திருப்தியில்
களைத்துறங்கிய நிர்வாண உடலெங்கும்
முத்தமுத்திரைகள்

வெளிச்ச விடியலில் கலைந்த தாள்களெங்கும்
ஈரம் அழித்த கவிதைகள்

தவமிருக்கிறோம் மற்றுமொரு இரவுக்கு
புதியக் கவிதைகளுக்காய்.


காத்திருக்கிறேன்

விடுமுறையில் வரும்போதெல்லாம்
கலைத்துப்போட்டுவிடுகிறாய் வலியக் காற்றைப்போல

மூழ்கடித்து விடுகிறாய்
சந்தோஷப்-பெருமழையில்
மூச்சுத்திணறிப்போகிறது ஆனந்தத்தில்

தாழ்வாரம் படுக்கையறை முற்றம்
குளியலறை சமையலறையென
எங்கும் இரைந்து கிடக்கிறதுன்
ஞாபகங்கள்

எது எப்போதெனத் தெரியா ரகஸ்யமே
உனதுசுவா ‘ரஸ்யம்
கொஞ்சம்-கொஞ்சமா ‘ய் முயற்சித்து
ஒழுங்குக்கு மீண்டு வரும்போது
தலைக்காட்டுகிறதுன் அடுத்த விடுமுறை

2.

மீறல்சுகம்
மின்தடை நேரங்களில் கம்பிவேலி தாண்டி குதித்தோடுகிறேன் என் ப்ரியத் தாவரம் நோ ‘க்கி
காவலனை ஏமாற்றி காத்திருக்கும் எதிர்பா ‘ர்த்து
மின்சாரமோ காவலனோ வந்துவிட்டால் உயிர்ப் போ ‘கும்
மீறல்களில்தானிருக்கு மிகுசுகம்
3####3

jpashivammumbai@rediff.com

Series Navigation

author

அன்பாதவன்.

அன்பாதவன்.

Similar Posts