அன்பாதவன்
—-
1)
இன்னமும் பூர்த்தியாகத வீட்டில்
புதுமனைப் புகுவிழா ஏதுமின்றி
குடித்தனம் நடத்துகிறதொரு
பூனைக் குடும்பம்
2)
மனைவியுடன் சம்பாஷிக்க வரும்
ரகஸ்ய நண்பனைப் போல
இரவின் அமைதியில் ஊடுருவி
பாத்திரமுருட்டும் பூனையொன்று
3)
பூச்செடிக்கு அருகே
முகர்ந்து பார்க்கிறது பூனை
வாசமில்லா அழகியப் பூவை
4)
கற்றுக் கொடுத்தது யாராயிறுக்கும்
படியேறி வருகின்றன பூனைக் குட்டிகள்
பார்த்தவுடன் மிரண்டோடிப்
பதுங்குகின்றன
குரலில் வெளிப்படுவது
மிரட்சியா… மிரட்டலா..
5)
குட்டிகளோடு சேர்த்து
ஏழோ எட்டோ இருக்கின்றன
பூனைகள்
ஆனாலும் இருக்கிறது
எலித்தொல்லை
6)
மிக அருகருகே வாழ்கிறோம்
பூனைகளும் நானும்
உறவுகளைப் போலவே
மன நெருக்கமின்றி.
—-
அன்பாதவன்,மும்பை
jpashivammumbai@rediffmail.com
- தீதும் நன்றும்
- பூனைகள்
- நவீனங்களின் சாம்பல்
- கண்களைச் செப்பனிட தட்ப ஒளிக்கதிர் லேஸர்அறுவை முறைகள் -5 (Eye Surgery with Cool Laser Beams Part 2)
- வாழ்க்கைக் கவிஞன் வல்லிக்கண்ணன்
- மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தடா! (மதிவண்ணன் கவிதைகளைப் பற்றி ஒரு கடிந்துரை)
- வறுத்த வறுகடலை – 1
- ரஜினி – ஷங்கர் ‘சிவாஜி ‘ தேறுமா… ?
- கடிதம்
- அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தருக்கு பாராட்டு விழா..
- திருப்பதி வரிசை
- கேட்பதெல்லாம் தந்திடுவேன்..
- இயக்கம்…
- தீக்களம்
- கீதாஞ்சலி (37) என்னுள் விடப்பட்ட ஒன்று ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஆண்மகன்
- என்னுரை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-5)
- தேவை : நீதி வழுவா நெறிமுறை
- ஒரு விசாரணையின் நூற்றாண்டு
- நடை – சுருளிப்பேட்டையில் சுருண்டோம் – பாகம் 2
- முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் – இறால் பண்ணைகள்; (Prawn Farms)
- ஆயினும் – இரண்டு கவிதைகள்
- அன்புள்ள ஆண்டவருக்கு
- தோழியின் வீடு
- மக்கள் மேம்பாடு !
- பெரியபுராணம் – 53
- திணித்தல்